எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீவில்லி, நவ. - 12 - ரயில் பயண சேவை என்பது சமுதாய ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகும். ஜாதி, மதம், இனம், மொழி மறந்து மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், தங்களுக்குள் வேற்றுமைகளை மறந்து பயணம் செய்ய இந்த ரயில் பயணம் பெரிதும் உதவுகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டானியாவும், தேசப் பிதா மகாத்மா காந்தியும் ரயிலில் செல்லும் போது வெள்ளையர்கள் அவரை ரயிலில் பயணம் செய்யக் கூடாது எனக் கூறி அடித்து துரத்தும் சம்பவமும், மணியாச்சியில் தியாகி வாஞ்சிநாதன், தூத்துக்குடி கலெக்டர் ஆஷ்துரையை அவரது மனைவியர் கண் எதிரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்ட சம்பவமும் நமது நினைவை விட்டு அகலுவது இல்லை. அந்தளவுக்கு வெள்ளையர் அமைத்த ரயில் நமது வாழ்க்கையில் ஒன்றி இருந்து வருகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் ரயில் சேவை என்பது வட மாநிலங்களை காட்டிலும், தென்னிந்தியாவில் சவலைப்பிள்ளையாக இருப்பது தெள்ளத் தெளிவாகும். தமிழகத்தில் மத்திய ரயில்வே துறையின் பங்கு மாற்றான்தாய் மனப்பான்மையாக இருப்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியாகும். உலக நாடுகள் ஒலியின் வேகத்தை ஒப்பிட்டு புல்லட் ரயில், சுரங்க ரயில் என அதிவேக ரயிலை செலுத்தி முன்னேறி வரும் வேளையில்தான் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரம் பெற்று 50 வருடங்களுக்கு பின்னால் அகல ரயில் பாதையை பார்த்தது. அதுவும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆமை வேகத்தில் அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. ஆனால் அதன் பிறகும் கடந்த 25 வருடமாக சென்ற ரயில்கள்தான் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை போன்ற தமிழக கடைக்கோடி நகரங்களில் இருந்தும் செல்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க. மத்திய அரசு கூட்டணியில் இருந்தும் கடந்த காலத்தில் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே போல் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செங்கோட்டை - கோவை ரயில் சேவை ஆகும். விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டு ரயில் விடப்பட்டது. அதிலும் குறிப்பாக, வைகோ சிவகாசி எம்.பியாக இருந்த சமயம்தான் விருதுநகர் தென்காசி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பின்னர் அது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. இதில் செங்கோட்டை தமிழகத்தின் எல்லையாகும். இந்த 2 பெரிய ஊர்களை இணைக்கும் ரயிலை இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்பதுதான். இந்த செங்கோட்டை - கோவை ரயில் வேண்டி பொதுமக்கள் பலர் பலமுறை நீண்ட வருடமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. செங்கோட்டை - கோவை ரயிலை இயக்கினால் பொதுமக்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் என்ன நன்மை என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். செங்கோட்டை தமிழக எல்லை நகரம். இங்கிருந்துதான் கேரளா செல்ல முடியும். சபரிமலை செல்வதற்கு நுழைவாயில் இதுதான். தொடர்ந்து தென்காசி. இங்கிருந்துதான் குற்றாலம் செல்ல முடியும். மேலும் ராஜபாளையம் ஒரு வர்த்தக நகரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக நகரம், சிவகாசி, விருதுநகர் தொழில் நகரங்கள். அதைத் தொடர்ந்து திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவை முறையே தொழில் நகரங்களாகும். மேற்குறிப்பிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் ரயிலை இயக்கினால் குறிப்பாக, தொழில் வளம், சுற்றுலா பெருகும். மேலும் குறிப்பாக, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவை, திருப்பூருக்கு செல்லும் போது பஸ்சை எதிர்பார்க்காமல் ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சொகுசாக பயணம் செய்ய முடியும். அதே போல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய பெரிய நகரை சேர்ந்த மக்கள் சுற்றுலா செல்ல இந்த ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்த முடியும். தற்போது மேற்குறிப்பிட்ட ஊர்களில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி அவதியுடன் பயணம் செய்கின்றனர். பயண நேரமும் அதிகமாகிறது. எனவே பொதுமக்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள், சபரிமலை பக்தர்கள் நலன் கருதி செங்கோட்டை - கோவை புதிய ரயிலை மத்திய அரசு உடனடியாக இயக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்களா? இந்த ரயில் திட்டம் அமலுக்கு வருமா? இந்த செங்கோட்டை - கோவை ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார