எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, டிச.1 - மதுரை தெற்கு மண்டல அலுவலகத்தில் இருந்த மு.க.அழகிரி எம்.பி.யின் அலுவலகத்தை உடனடியாக அகற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் முதல் கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் நடராஜன், துணை மேயர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் மேயர் ராஜன் செல்லப்பா திருக்குறளை வாசித்தார். இதனைத் தொடர்ந்து துணை மேயர் கோபாலகிருஷ்ணன் தீண்டாமை உறுதிமொழியை வாசித்தார். பின்னர் மேயர் ராஜன்செல்லப்பா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானத்தை வாசித்தார். அப்போது மேயர் குறிப்பிடுகையில், மதுரையில் அஞ்சாநெஞ்சர் என்று தம்பட்டம் அடித்தவர்கள் எல்லாம் இப்போது அஞ்சி ஓடிவிட்டதால் மதுரை மக்களாகிய நீங்கள் அனைவரும் அஞ்சாநெஞ்சர்கள் ஆகிவிட்டீர்கள் என்று மதுரை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதை எடுத்துக்கூறினார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து தி.மு.க. கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதனால் மாமன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து மேயர் ராஜன் செல்லப்பா தீர்மானத்தை வாசித்து முடித்தார். தமிழக முதலமைச்சரை பாராட்டும் தீர்மானத்தின் மீது இப்போது விவாதம் தொடங்குகிறது என்று மேயர் ராஜன் செல்லப்பா கூறிவிட்டு தெற்குமண்டல தலைவர் சாலைமுத்துவை பேச அழைத்தார்.
மாமன்ற கூட்டத்தின் முதலில் எதிர்க்கட்சி தலைவரை பேச அழைக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மண்டல தலைவர் சாலைமுத்து எழுந்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் மட்டுமல்ல, மதுரை மாநகரில் முதல்வர் அம்மாவின் ஆட்சி மலர்ந்தபின்புதான் மதுரை மாநகர மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகாலமாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் மு.க.அழகிரியின் அட்டூழியத்தால் கெட்டழிந்துவிட்டது. சீரழிந்துவிட்டது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் முடங்கிப்போய் விட்டது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சீர்குலைந்த மாநகராட்சியை சீர்செய்யும் பொறுப்பை மக்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். நமது மேயர் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர். மதுரை மக்களைப் பற்றி நன்கு அறிந்தவர். அதற்காகத்தான் அவருக்கு ஒட்டுமொத்த வாக்காளர்களும் வாக்களித்து அமோக வெற்றியை பெறச் செய்திருக்கிறார்கள். எனவே நாம் மக்கள் பணியை செம்மையாகச் செய்ய வேண்டும். மு.க. அழகிரியின் கொள்ளை கும்பலிடம் இருந்து மதுரையை மீட்டெடுத்து, மாநகராட்சியையும் கைப்பற்றி என்னைத் தெற்கு மண்டலத் தலைவராக தேர்ந்தெடுத்த முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கெல்லாம் தாயாக இருந்து காத்து வருகின்ற அந்த தாயின் வழியில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலத்தலைவர் கே.ராஜபாண்டியன் பேசியதாவது:-
மதுரையை மீட்டெடுத்து என்னை மேற்கு மண்டலத் தலைவராக பதவியேற்க வைத்த முதல்வர் அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க.வினரின் கரத்தில் சிக்கி மாநகராட்சி சின்னாபின்னமாகிவிட்டது. அஞ்சா நெஞ்சன் என்று கூறிக்கொள்ளும் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே கூறிவருகிறார்கள். அவர்களது மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மதுரை மாநகர் உலக அளவில் கோவில் மாநகர் என்று சிறப்புப்பெற்றது. சங்கம் வளர்த்த மதுரையில்தான் திருக்குறள் எழுதப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தூங்கா நகர் என்று பெயர்பெற்ற மதுரை மாநகரில் தூங்காத மீன்கொடி ஏந்தி மீனாட்சி தாய் ஆட்சி செய்வதால்தான் தூங்காநகரம் என்று மதுரை பெயர்பெற்றது. அப்படிப்பட்ட மதுரையிலே வாழுகின்ற மக்கள் முதல்வர் அம்மாவுக்கு வாக்களித்து நம்மையெல்லாம் அமோக வெற்றிபெறச் செய்துள்ளார்கள். அவர்கள் நம்மிடம் ஏராளமான எதிர்பார்ப்புகளை முன்வைத்துள்ளார்கள். மக்களின் அந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்ற வேண்டும். இதற்கெல்லாம் நிதி ஆதாரம் திரட்ட வேண்டும். முதல்வர் அம்மாவிடம் நீங்கள் (மேயர்) எடுத்துக்கூறி நிதியை பெற வேண்டும். அம்மாவின் அருகில் இருந்தவர்தான் நமது மாநகராட்சி கமிஷனராக இருக்கிறார். சாமிக்கு அருகில் இருந்த பூசாரிதான் நமது மாநகராட்சி கமிஷனர். அவரும் மேயரும் சேர்ந்து அம்மாவை சந்தித்து அதிக நிதியை பெற்று மதுரை மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு மண்டலத் தலைவர் கே.ஜெயவேல் பேசியதாவது,
என்னை இரண்டாவது முறையாக வடக்கு மண்டல தலைவராக நியமித்த முதல்வர் அம்மாவுக்கும் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 47-வது வார்டு பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் பணியை ஆற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
கிழக்கு மண்டல தலைவர் மு.இராஜபாண்டியன் பேசியதாவது:-
அடிமட்ட தொண்டனாகிய என்னை மண்டல தலைவராக உருவாக்கிய முதல்வர் அம்மாவுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரை மாநகராட்சியை தி.மு.க.வினர் சீர்கெட்ட நிர்வாகத்தால் சீரழித்து விட்டார்கள். அவற்றையெல்லாம் நாம் சீர்செய்ய வேண்டும். மதுரை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து நிலைக்குழு தலைவர்கள் எஸ்.டி.ஜெயபாலன், கண்ணகி பாஸ்கரன், கே.முனியாண்டி, ஏ.சுகந்தி, ஆனையூர் சரவணன் ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினார்கள். இவர்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்து பேசினார்கள். இதன் பின்பு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் செல்லம் பேசினார். அப்போது வெளியே சென்ற தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் மாமன்றத்திற்குள் வந்தனர். அவர்கள் மேயர் ராஜன் செல்லப்பாவிடம் எங்களுக்கும் பேச வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டனர். அதற்கு மேயர் ராஜன் செல்லப்பா பதிலளித்து பேசுகையில், இது முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்துகொண்டிருப்பதால் உங்களில் யார் யார் பேசுவது என்ற பட்டியலை என்னிடம் கொடுங்கள். அதன்பின்னர் நான் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் அவையில் இருந்து வெளியேறிவிட்டனர்.
அதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் இயங்கிவந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் மு.க.அழகிரியின் அலுவலகம் அகற்றம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-
மதுரை மேலமாரட் வீதியில் தெற்கு மண்டல அலுவலகம் இயங்கிவந்த காலத்தில் 19 வார்டுகள் இருந்தன. தற்போது மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு பின் 26 வார்டுகளை உள்ளடக்கி இயங்கிவருகிறது. இந்த அலுவலக தரை தளத்தில் சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மண்டல அலுவலக பணியாளர்களுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் ஆவணங்கள் வைப்பதற்கும் ஊழியர்கள் வேலை செய்வதற்கும் இடம் தேவைப்படுகிறது. மேலும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் 2009 அக்டோபர் மாதம் முதல் செயல்படவே இல்லை. எனவே மாநகராட்சி விரிவாக்கத்திற்குப்பின் தெற்கு மண்டல அலுவலகம் போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வருவதால் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கிவந்த 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அலுவலகத்தை தெற்கு மண்டல அலுவலகம் திரும்ப எடுத்துக்கொள்வது அவசியமாவதால் கடந்த 24.9.2009 ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மீண்டும் தெற்கு மண்டலத்திற்கு திரும்ப எடுத்துக்கொள்வதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.