எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஜன.12 - திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதையடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் அலங்கார்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி பாண்டியன்(54). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆவார். இவரது வீடு திண்டுக்கல் அருகிலுள்ள நந்தவனப்பட்டியில் உள்ளது. இங்கு தனது தாயார் வேலம்மாள், மகள் சந்தனபிரியா(14), மகன் சந்தோஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் கடந்த 2006ம் வருடம் ஏப்ரல் 6ம் தேதி தூத்தூக்குடி அருகே படுகொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியன் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது வீட்டுமுன்புறம் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென வந்த 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் நேரில் சென்று பிணத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு அருகிலுள்ள கள்ளிப்பட்டி வரை சென்று விட்டு அங்கேயே நின்று விட்டது. இதனிடையே பசுபதி பாண்டியன் படுகொலை சம்பவம் காட்டுத்தீ போல் நகரெங்கும் பரவியது. வியாபாரிகளும், கடைக்காரர்களும் தங்களின் கடைகளை அடைத்து விட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினர். நகருக்குள் வந்து கொண்டிருந்த பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நிலக்கோட்டை அருகே பேருந்தின் மீது கல்வீசி தாக்கி கண்டக்டரிடம் பணப்பையைப் பறிக்க முயன்ற 2 பேரை டி.எஸ்.பி. புஷ்பம் தலைமையில் போலீசார் விரட்டி சென்று பிடித்து அவர்களை கைது செய்தனர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்ததுடன் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்றுக்காலை 9 மணியளவில் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் புடைசூழ ஆம்புலன்சில் இருந்து வாகனங்கள் பின்தொடர்ந்து வர அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னே மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், காவல்துறையினர் பாதுகாப்புடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்றது. அங்குவிலாஸ் இறக்கம், சவரியார் பாளையம், தோமையார்புரம் வழியாக மதுரை நோக்கி சென்றது. வழியெங்கிலும் அவருக்கு பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். முருகன்பட்டி என்ற இடத்தில் சென்ற போது 5000க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்துகளும் இயங்காததால் நகரே வெறிச்சோடிக் காணப்பட்டது.
கொன்றது கூலிப்படையா?
பசுபதி பாண்டியன் நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டில் எப்போதும் ஆதரவாளர்கள் 15 பேர்களுடன் தான் இருப்பார். நேற்றுமுன்தினம் தேனியில் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்து விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் அவர்களை சாப்பிட போக சொல்லி விட்டு போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அந்நேரம் மறைந்திருந்து சட்டை அணியாமல் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது பாய்ந்தனர். அவர் சுதாரிப்பதற்குள் சரமாரியாக வெட்டி விட்டு ஓடி விட்டனர். உடலில 13 இடங்களில் வெட்டு இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு பல வழிகளில் எதிரிகள் இருப்பதால் கூலிப்படையை வைத்து இக்கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை தொடர்பாக மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ்ஈடுபட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.