எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.- 5 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று நலத்திட்ட உதவிகள், ரத்ததானம்,மருத்துவ சிகிச்சை, சட்ட உதவி முகாம்கள் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவு முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வழக்கறிஞர்கள் பிரிவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு எஸ். சேதுராமன் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் தலைமை தாங்கினார். பி.எச். மனோஜ்பாண்டியன் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் முன்னிலை வகித்தார். எம்.எல். ஜெகன் வட சென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வரவேற்றார். அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், செ. செம்மலை அமைப்புச் செயலாளர், கே.கே. கலைமணி மீனவர் பிரிவுச் செயலாளர் கருத்துரை வழங்கினார்கள். தாமல் டி. கண்ணா தென் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் நன்றி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முதல்வர் ஜெயலலிதாவின் 64ஆவது பிறந்த நாளை கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பாக தமிழகம் முழுவதும் ஏழை, எளியோர்க்கு உதவுகின்ற ஈகைப் பெருநாளாகவும், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நல உதவிகள் வழங்குகின்ற நன்னாளாகவும், ரத்ததானம் மற்றும் மருத்துவ சிகிச்சை மற்றும் சட்ட உதவி முகாம்கள் உள்ளிட்டவற்றை நடத்தி, மக்களின் நல்வாழ்வு பேணுகின்ற நன்னாளாகவும், மரக் கன்றுகள் நட்டும், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கியும் உதவுகின்ற உவகைத் திருநாளாகவும் இந்நாளை கொண்டாடிட இந்தக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கியும், ஏழ்மை nullங்கிடவும், ஏழைகளை தாங்கிப் பிடித்திடவும் எண்ணில்லா நலத் திட்டங்களை அள்ளித் தந்தும், தமிழகத்தில் அறிவுசார் புரட்சியை உருவாக்கிடவும், உலகத் தரக் கல்வியை தமிழக மாணவர்களுக்கு தந்திடவும் கணினி முதல் காலணி வரை, கல்வி ஊக்கத் தொகை முதல் கணித உபகரணங்கள் வரை என அனைத்தையும் அள்ளித் தந்து, கலைமகளும் பாராட்டும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டும், இல்லாமை, கல்லாமை இரண்டும் போக்கிடும் இணையில்லா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை இந்த கூட்டம் போற்றி வணங்குகிறது. முல்லைப் பெரியாறு போன்றவற்றில் தமிழகத்தின் nullநீர் ஆதார உரிமைகளை நிலைநாட்டவும், கச்சத் தீவினை மீட்டெடுத்து, அலைகொண்ட கடல் மீது வலைகொண்டு வாழும் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிட போராடி வரும் கடமை மிகு கழக அரசின் முதலமைச்சரும், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை கழக வழக்கறிஞர் பிரிவு நெஞ்சாரப் பாராட்டி, நெகிழ்ந்து போற்றுகிறது.
சமீபத்தில் தானே புயலால் பாதிப்புக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையிலான மீட்புப் பணிகளை களமிறக்கி, இந்தியாவிலேயே இதுவரையில் எந்த ஒரு அரசும் செய்திடாத அளவில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, சாலைகளை செப்பனிட்டு, மின் விநியோகத்தை சீரமைத்து, நிவாரண உதவிகளை வழங்கி நிகரில்லா சாதனை புரிந்ததோடு, அடித்த காற்றில் இழந்த கூரைகளை புத்தம் புதிய கான்கிரீட் வீடுகளாக கட்டித் தந்திட ஆயிரம் கோடி ரூபாயாக ஒதுக்கி, ஒரு லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதாவை ஈகைப் பெருமுடிவை இக்கூட்டம் வணங்கி வரவேற்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை, ஆக்கிரமிக்கப்பட்ட உடமைகளை, பறிக்கப்பட்ட சொத்துக்களை, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது போலவே, கழகத்தின் ஆட்சி அமைந்ததும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அபகரிப்பு உடமைகளை மீட்டுத் தந்து, ஈடு இணையில்லா சாதனை படைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்மைத் திடத்தையும், நெஞ்சுறுதியையும் இக்கூட்டம் நன்றியோடு போற்றி மகிழ்கிறது.
தன்னை மெய்வருத்தி உழைக்கும் தாயின் முயற்சியால், நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் ஈடு இணையில்லா இமாலய வெற்றி, அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புத் தேர்தலிலும் சரித்திரமும் வியக்கும் வண்ணம் பெரு வெற்றி என்று வெற்றி மேல் வெற்றிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சிப் பெருமைகளை, நயமான திட்டங்களை, ஒளிவு மறைவில்லா ஒப்பற்ற நிர்வாகத்தின் பெருமைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம், கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் வாயிலாக கொண்டு செல்லும் பணியை கடமை உணர்வோடும், கண்ணும் கருத்தோடும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் செவ்வனே செய்து முடித்திட உளமாற உறுதி ஏற்கிறோம் என்றும் இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.