எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.20 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிசென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர், விக்ரம் கபூர், தலைமையில் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை மூலம் ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை தற்பொழுது 203 எண்ணிக்கையில் அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, விலைக்கட்டுப்பாடு, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் பரிட்டலா சுனிதா, நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் டாக்டர். பி. நாராயணா, வேளாண்மைத்துறை அமைச்சர் பிரத்திபட்டி புல்லா ராவ் ஆகியோர்கள் அடங்கிய குழு சந்தித்தது. இக்குழுவிற்கு முதன்மைச் செயலர்/ஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், அம்மா உணவகங்கள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்.
இக்குழு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்தைப் பார்வையிட்டது. இந்த அம்மா உணவகத்தில் உள்ள பொருள்கள் வைக்கும் அறை, சமையலறை, சாப்பாடு வழங்கும் இடம், சாப்பிடும் அறை, பாத்திரங்கள் கழுவும் அறை, சாப்பிடுவதற்கு டோக்கன் வழங்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு, உணவு தரமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இக்குழுக்கள் அம்மா உணவகத்திற்கு தேவையான பொருள்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன எனவும், இங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தும், பணியாளர்களின் பணி நேரம் குறித்தும், சுத்தமான, சுகாதாரமான, சுவையான உணவு தயாரிக்கும் முறை குறித்தும், சுத்தமான தண்ணீர் வழங்கப்படும் முறை குறித்தும், பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தும் முறைகளையும், இவற்றிற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அமைச்சர் பெருமக்கள் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் இங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், சுவை, சுகாதாரம் போன்றவை குறித்து கேட்டனர். அதற்கு பொதுமக்கள் இங்கு வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் மற்றும் குறைந்த விலையிலும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
அமைச்சர் பெருமக்கள், இந்த அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் இருக்கிறது எனவும், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, அனைத்து பிரிவினர்களும் இந்த அம்மா உணவகத்தில் சாப்பிடுவதைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும், இந்த அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை அளிப்பது மட்டுமல்லாமல் மகளிருக்கான வேலைவாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தனர். மேலும், நிர்வாகத்திறன் மிக்க இந்த அம்மா உணவகத்தைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அம்மா உணவகத்தை எங்களது அமைச்சர் பார்த்துவிட்டு வந்தபிறகு, எங்களது முதலமைச்சர் உடனடியாக ஒரு குழுவினை அமைத்தார். அக்குழுதான் நேற்று அம்மா உணவகங்களைப் பார்வையிட்டு வருகிறது. விரைவில் தங்களது மாநிலத்திலும் முக்கியமான மாநகராட்சிகளில் இதுபோன்ற மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்க இந்த அம்மா உணவகங்களை திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இக்குழு உறுப்பினர்கள் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பின்னர் இக்குழுவினர் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சிகளில், சென்னை மாநகராட்சி துணை மேயர் பா. பென்ஜமின், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.லட்சுமி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நுகர்பொருள் வழங்கல்துறை இயக்குநர்
ஜி.ரவி பாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநர் வாணி மோகன், அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் எம்.வி.சாலமன் ஆரோக்கியராஜ், குண்டூர் மாவட்ட ஆட்சியர்
காந்திலால் தண்டே, சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின், விசாகப்பட்டினம் துணை ஆட்சியர் பிரவீன்குமார், நெல்லூர் மேயர் அப்துல் அஜீஸ் அனந்தபூர், விசாகப்பட்டினம், குண்டூர், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய மாநகராட்சிகளின் ஆணையாளர்கள், ஆந்திர மாநில நுகர்பொருள் வழங்கல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி