முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முதல்வராக ஒத்தக்கடை யோகநரசிம்மர் கோயிலில் பூஜை

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை ஒத்தக்கடை யோகநரசிம்மர் கோயிலில் லட்சார்ச்சனை பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நடத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி தமிழ்நாடு முழுவதும் மாநில அம்மா பேரவை சார்பில் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், தர்ஹாக்களில் சிறப்பு தொழுகைகளும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஒத்தக்கடை அருகே உள்ள யோக நரசிம்மர் கோயிலில் நேற்று லட்சார்ச்சனை பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த சிறப்பு லட்சார்ச்சனை பூஜை, வழிபாடுகளை அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் முன்னின்று நடத்தினார். இந்த லட்சார்ச்சனை பூஜையை யோக நரசிம்மர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டர், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் ஸ்தானிகம் எஸ். கோபால் பட்டர் ஆகியோர் தலைமையில் பட்டர்கள் நடத்தினர். இந்த சிறப்பு லட்சார்ச்சனை பூஜை குறித்து பட்டர்கள் கூறுகையில், தமிழகத்தின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வர வேண்டி இந்த லட்சார்ச்சனை பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் யோக நரசிம்மருக்கு நூறு முறை வேத பாராயண நாமங்களை சொல்லி நடத்தப்பட்டது. இந்த பூஜையில் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அதிமுகவினரும் கலந்து கொண்டு வழிபட்டனர் என்றனர்.
இந்த சிறப்பு பூஜையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் ம. முத்துராமலிங்கம், மேலூர் ஆர். சாமி, கே. தமிழரசன், எம்.வி. கருப்பையா, துணை மேயர் கு. திரவியம், மதுரை கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா. இளங்கோவன், ஒன்றிய சேர்மன் பழனியம்மாள் தனபால், மாவட்ட கவுன்சிலர் கள்ளந்திரி பி. சேகர், மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ். முருகன், மாவட்ட பாசறை செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே. முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட பேரவை இணை செயலாளர் அய்யர் பங்களா கருப்பணன், மாவட்ட பேரவை தலைவர் பிரேம் ஆனந்த், துணை செயலாளர் வக்கீல் சேகர், அவனியாபுரம் ராமமூர்த்தி, திருமங்கலம் தமிழழகன், வேல்முருகன், ஆர். ராமர், எம்.ஏ. பாலு, மேலூர் சரவணன், வெற்றி செழியன், மேலூர் பாலகிருஷ்ணன், மேலூர் செல்வராஜ், பாண்டுரெங்கன், திருப்பரங்குன்றம் நகர துணை செயலாளர் ஆர்.எம்.சி. ரவி, ஆர். குமார், கல்லுப்பட்டி தங்கராஜ், திருநகர் முருகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து