எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,- உலகத்தமிழ்சங்க வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நாள் விழாவில் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி பேருரையாற்றினார்.
இவ்விழாவில் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தெரிவிக்கையில்:
திரும்பிய திசையெல்லாம் முத்திரை பதித்து வருகிறது கலைப்பண்பாட்டுத்துறை. 27 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த துறை இதே நாளில் உருவாக முழு முதல் காரணமாக இருந்தவர் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களாகும். டிசம்பர் 23ம் தேதி கலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை அரசு இசைப்பள்ளிகளை வைத்து இந்த கலை நாள் விழா கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கலைவிழாவில் நமது இசை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் இசைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பலதுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த கலைப்பண்பாட்டுத்துறை.
தமிழ்வளர்ச்சி, கலைப்பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல், கைவிணைத்துறை ஆகிய ஐந்து துறைகளை இணைத்து ஒருங்கிணைந்த பண்பாட்டுத்துறை வெகுவிரைவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும். இதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்தில் நமது பழங்கால இசைகருவிகள் இடம்பெற்றுள்ள ஒரு அரங்கு கலைப்பண்பாட்டுத்துறையினராக அமைக்கப்பட்டுள்ளது. இது மேலும் இத்துறைக்கு சிறப்பாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைப்பண்பாடு, தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறைக்கென ரூ.227 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள்.
இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் ஆர்வத்தினை பெருக்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.400 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்த துறையின் அமைச்சராக பெறுப்பேற்றவுடன் 10 திட்டங்களை அறிவித்தேன். அதில் முக்கியமானது நமது இசைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதென்று. அதன்படி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒரு இசை ஆசிரியர் மற்றும் ஒரு நாட்டிய ஆசிரியர் நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
சென்னை மயிலாப்பூரில் ஜவஹர் சிறுவர் பந்த் திட்டத்திற்;கென தலைமை கட்டிடம் ஒன்று உருவாகவுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவஹர் சிறுவர் பந்த் திட்டம் தனித்து இயங்காமல் இசை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் சேர்ந்து இயங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் உங்கள் வலிமை முன்னேறும். இசை நகரம் என்று சென்னைக்கு அங்கீகாரம் கிடைத்தது உங்களுடைய முயற்சியால்தான். யுனோஸ்கோ மூலம் ரூ.5 கோடி மதிப்பிலான கூட்டரங்கம் கட்ட நிதி கிடைத்துள்ளது. இசை பல்கலைக்கழகத்திற்கு என புது இடம் சோழிங்கநல்லூர் தொழில்நுட்ப பூங்கா மத்தியில் தமிழக அரசால் வழங்கப்பட்டு அதில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் கலைமாமணி விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்படும்.
இசைப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சிவன் கோயில்களில் எப்படி ஓதுவார்கள் உள்ளனரோ அதேபோல் தனியார் பங்களிப்புடன் நமது ஊர்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் பாட வைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இசைப்பள்ளிகளில் பயிலும் 1000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இசைப்பள்ளிகள் அனைத்தையும் திறன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் சமுதாயக் கல்லூரிகள் போல மாற்றுவதற்கு முயற்சி எடுத்து செயல்படுத்த உள்ளோம். கும்பகோணம் கவின் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 10 கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இசை கருவிகள் அல்லது நடனக்கருவிகள் வாங்குவதற்கு தலா ரூ10,000 நிதி ஒதுக்கி 320 கலைஞர்களுக்கு ரூ.3,20,000 மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டுவிடும். கலைக்குழுவிற்கு ஆண்டிற்கு ரூ.1 கோடி என ஒதுக்கப்பட்டுள்ள நிதி தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற வாரம் காமராஜர் அரங்கத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மெல்லிசை கலைஞர்கள் குழுவிற்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். முக்கியமாக நமது மாநிலத்தில் உள்ள அனைத்து நினைவகங்களிலும் செய்தித்துறையின் மூலம் லைவ் மியூசிக் இசைப்பதற்கு நிரந்தர கலைஞர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் நினைவில்லத்தில் இந்த லைவ்p மியூசிக் அமலுக்கு வந்துள்ளது. கலை உலகிற்கு பெருமை சேர்க்கின்ற மாவட்டகளாக தஞ்சாவூர் மற்றும் மதுரை திகழ்கிறது என தெரிவித்தார்.
இவ்விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா உள்ளிட்ட கலைஞர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப
-
மும்பையில் அதிர்ச்சி சம்பவம்: சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர் பலி
08 May 2024மும்பை : மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.