எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிர்பூர், மார்ச் - 19 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை வெற்றிகண்டது. இதன்மூலம் இந்தியா இறுதிபோட்டி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா தான் விளையாடிய முதல் போட்டியில் இலங்கை அணியை வென்றது. ஆனால் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா நேற்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டி மிக முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது. ஏற்கனவே போனஸ் புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தான் அணி நெருக்கடி எதுவும் இல்லாமல் களமிறங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் நஸீர் ஜாம்ஷெட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தனர். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ரன்களைக் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த ஜோடி 100 ரன்களை 17.3 ஓவர்களில் அடைந்தது. 200 ரன்களை 196 பந்துகளில் பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த துவக்க ஜோடியில் முகமது ஹபீஸ் முதலில் சதமடித்தார். அடுத்து நஸீர் ஜாம்ஷெட் 98 பந்துகளில் சதமடித்தார். பாக். அணி 224 ரன்களை எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டாக நஸீர் ஜாம்ஷெட் அவுட்டானார்.112 ரன்கள் எடுத்திருந்த நஸீர், அஸ்வின் பந்தில் பதானால் கேட்ச் பிடிக்கப்பட்டார். அடுத்து 225 வது ரன்னில் முகமது ஹபீசும், அசோக் டிண்டாவின் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய யூனிஸ்கான், உமர் அக்மலுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 24 பந்துகளில் 28 ரன்களை அடித்த அக்மல், குமாரின் பந்தில் காம்பீரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து யூனிஸ்கான் 34 பந்துகளில் 52 ரன்களை குவித்து, குமாரின் பந்தில் சுரேஷ் ரெய்னாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். ஷாகித் அப்ரிடி 9 ரன்களிலும், ஹம்மத் ஆஸம் 4 ரன்களிலும் அவுட்டாகினர். இதையடுத்து பாக். அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்தது. மிஸ்பா உல் ஹக் 4 ரன்களுடனும், உமர்குல் ரன் எதுவும் எடுக்காமலும் இருந்தனர். இந்திய தரப்பில் குமார் மற்றும் டிண்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும், காம்பீரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காம்பீர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் முகமது ஹபீஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி, சச்சினுடன் ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. சச்சின் இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். 19.3 ஓவர்களில் இந்திய அணி 133 ரன்களை எடுத்திருந்தபோது சச்சின் தனது 52 வது ரன்னில் சயீத் அன்வர் பந்தில் யூனிஸ்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து கோலியுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பாக். பந்துவீச்சை பதம்பார்த்தது. பாகிஸ்தான் அணியைப் போலவே இந்திய அணியும் 196 பந்துகளில் 200 ரன்களை கடந்தது. விராட் கோலி 97 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 305 ரன்களை கடந்திருந்தபோது 68 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மா, உமர்குல்லின் பந்தில் அவுட்டானார். 47.1 ஓவரில் இந்திய அணி 318 ரன்களை எடுத்திருந்தபோது 148 பந்துகளில் 183 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி, உமர்குல்லின் பந்தில் ஹபீசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். இந்திய அணி 47.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாக். அணியை வென்றது. அதிரடியாக 183 ரன்களை குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.