எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.23 - தமிழகத்தல் அடுத்த 11 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும், குடிசையில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படுவதே, மாநில அரசின் இலக்கு என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ரூ.15 லட்சம் கோடியில் தமிழகத்தில் 11 ஆண்டு காலத்தில் தனி நபர் வருமானத்தை 6 மடங்கு உயர்த்தி ஏற்றத் தாழ்வற்ற வறுமையற்ற, குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்கும் தொலை நோகுத் திட்ட அறிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.
'தமிழ்நாடு தெலைநேக்கு திட்டம் 2023' என்ற ஆவணம் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தல் உள்ள தாஜ் கேரமண்டல் என்ற ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு தெலைநேக்கு திட்டம் 2023' என்ற தலைப்பிலான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா வெளியிட நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சாலைகள், உலகத்தரம் வாய்ந்த நகரங்கள், தங்குதடையற்ற மின்சாரம் ஆகியவற்றை கிடைக்கச் செய்வது தமது லட்சியம் என்றும் ஜெயலலிதா கூறினார். நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்த்தப்படும் என்றார். அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சி தமிழக பொருளாதார வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நாள். 2011ம் ஆண்டு நான் பதவியேற்ற போது தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக்குவேன் என்று உறுதி அளித்தேன்.
அமெரிக்கா குறித்து மார்ட்டின் லூதர் கிங்குக்கு பெரும் கனவு உண்டு. அதைப் போல சிறந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கும் உண்டு. வேலையில்லாத இளைஞர்கள் இல்லை, முற்றிலுமாக வறுமை ஒழிப்பு, கல்வி, குடிநீர், துப்புரவு ஆகியவற்றுடன் பாதுகாப்பு, வளம், அமைதி ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது லட்சியமாகும். வரும் நூற்றாண்டில் தமிழகத்தை பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். இந்த கனவை நினைவுப்படுத்தும் வகையில் 2023 தொலைநோக்கு பார்வை திட்டம் அமைந்துள்ளது. தலைவர்கள் தாங்கள் காணும் கனவுகளை நனவாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். எங்கு தொலைநோக்கு பார்வை இல்லையோ அங்கு நம்பிக்கைக்கு இடமில்லை.
இப்போது அளிக்கப்படும் தொலை நோக்கு பார்வை திட்டம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் கிடைக்கும் வகையில் அமையும். அனைத்து வகையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக இத்தகைய தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இதனை செயல்படுத்த இருக்கிறோம். இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட இது 20 சதவீதம் இது கூடுதலாக இருக்கும்.
இன்னும் 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 சதவீதம் அளவுக்கு உயரும் என்பதை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி தனி நபர் வருமானம் 6 மடங்காக உயரும். தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளில் 1989ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் 7 முதல் 10 சதவீத வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. ஆசியாவில் சில நாடுகளும், இந்தியாவில் சில மாநிலங்களும் அதிகளவில் வளர்ச்சி விகிதத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 11 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு, அதாவது ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும். இது உலக நாடுகளில் உள்ள உயர், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சமமாக இருக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான சுகாதாரத் திட்டங்கள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகள் குறையும் அளவுக்கு நடவடிக்கைகள் அமையும். குறைந்த வருவாய் பிரிவினருக்கு கணிசமான ஆதாரங்களை அளிப்பதின் மூலம் வறுமையற்ற மாநிலமாக தமிழகம் மாறும்.
2023-ம் ஆண்டில் தமிழகத்தில் யாரும் பின்தங்கி இருக்கக்கூடிய நிலைமை இருக்காது. பொருளாதார சக்தியில் முதன்மை மாநிலமாக, அனைவருக்கும் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிnullநீர் கிடைக்கும். திறந்த சாக்கடை திட்டம் முற்றிலுமாக நீக்கப்படும். குடிசைகளற்ற, குடிசைப் பகுதிகளற்ற நிலைமையை உருவாக்க ஏழை மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப 25 லட்சம் வீடுகள் கட்டப்படும். உலகத்தரத்திற்கு ஈடாக உயர்நிலைக் கல்வியை கிடைக்கச் செய்வதுடன் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்படும். அனைத்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும், குடிசையில்லாத ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு தொழில், வர்த்தக நிறுவனமும் தங்கு தடையற்ற நிலையான மின்சாரத்தை பெறச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும். மாநிலத்தின் நீnullண்டகால மின் தேவையைக் கருத்தில் கொண்டு இன்னும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையை கருத்தில் கொண்டு இன்னும் 11 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த 10 தொழில்நுட்ப மையங்களை அமைக்க வேண்டும். நவீன அறிவியல், விவசாய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தி விவசாய உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த 10 நகரங்கள் தமிழகத்தில் உருவாக்கப்படும். தற்போதுள்ள நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இந்த நகரங்கள் விளங்கும். இந்த திட்டங்களை நிறைவேற்ற கணிசமான நிதி தேவை. இவற்றை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவை என்று மதிப்பிடப்படுகிறது. மாநில அரசு மட்டுமே இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட முடியாது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். தனியார் துறை அமைப்புகள், வங்கிகள், நேரிடை வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகள் மூலம் கணிசமான நிதியை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் சார்பில் அடிப்படை கட்டமைப்பு வசதி சேவைகளை பெறுவதற்கு மாநில அரசு முக்கிய பங்காற்றும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் துறை பங்களிப்பை ஈர்ப்பதற்கு தமிழகம் முதலீடு செய்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும். இதன் மூலம் ஆசிய அளவில் 3 முதலீட்டு மையங்களில் தமிழகம் முன்னணி இடத்தைப் பிடிக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
விழாவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்திற்கும், இந்திய எண்ணெய் கழகத்திற்கும் இடையே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் எல்.என்.ஜி. இறக்குமதி முனையம் அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்திற்கும், இந்திய பொறியாளர் நிறுவனத்திற்கும் இடையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மேம்பாட்டு முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான உடன்படிக்கையும் செய்துக் கொள்ளப்பட்டது. விழாவில் ஏராளமான தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.