முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: குஷ்பு கவனமாக இருப்பது நல்லது - பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

நெல்லை : காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு அண்மையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தகாத முறையில் நடந்த ஒருவரை குஷ்பு கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் வைரலானது.

இதுகுறித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால் குஷ்பு கொஞ்சம் கவனமாக இருந்து கொள்வது நல்லது.

ராகுல்காந்தி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்த போது, தமிழன் தமிழ்நாட்டை ஆளுவான் என்று பேசியுள்ளார். தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் பழனிசாமி தமிழர்தானே! அவர் தமிழனா, வேறு ஆளா? என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து