எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : கோதாவரி மற்றும் காவிரி நதிகளை முன்னுரிமை அடிப்படையில் இணைக்க வேண்டும். தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.4,458 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில், மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதிஆயோக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், தமிழகத்தில் தற்போது நிலவும் வறட்சி நிலைமை, அதை தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், இராமநாதபுரம், ஓசூர் ஆகிய இடங்களில் விமான சேவைகளை துவக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது.,
கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தினை காலதாமதமின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும். கங்கை சீரமைப்பு திட்டம் போன்று காவேரி ஆற்றினை சீரமைக்க மத்திய அரசு "நடந்தாய் வாழி காவேரி" திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும். காவேரி வடிநிலத்தின் ஒன்பது பாசன அமைப்புகளையும் மேம்படுத்தி, புனரமைக்கும் திட்டத்தை (17,600 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில்) தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்த தொழில்நுட்ப பொருளாதார மற்றும் முதலீட்டு அனுமதி வழங்க வேண்டும்.
152 அடியாக உயர்த்த...
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த தேவையான அனுமதிகளை வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை உருவாக்கிடவும், நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுதலை தடுத்திட பழமையான நீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், தேவையான நிதியினை அளித்திட வேண்டும். தமிழ்நாட்டின் கருத்துக்களை கேட்டு, நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வரை, அணைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
புதிய விமான நிலையம்...
மின்சார திருத்த மசோதா 2014-ஐ சட்டமாக இயற்ற மத்திய அரசு மேலும் நடவடிக்கைகளை தொடரக் கூடாது. மேலும், மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் தான், மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதா 2017-ஐ சட்டமாக்க வேண்டும். சென்னையில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தகுந்த பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2-ஐ தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு கூட்டு பங்களிப்பு திட்டமாக அனுமதிக்க வேண்டும்.
வானூர்தி சேவையை...
ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையத்தினை சேலம் இரும்பு எஃகு ஆலை வளாகத்தில் உள்ள காலியிடத்தில் அமைக்குமாறு கோரிக்கை வைக்கிறேன். உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலி மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு வானூர்தி சேவையினை தொடங்க வேண்டும். மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விரைந்து நில மாற்றம் செய்ய வேண்டும் என்ற கேட்டுக் கொள்கிறேன்.
உள்ளாட்சி அமைப்புகள்...
தமிழ்நாட்டில் பாரத் நெட் நிலை -ஐ திட்டத்திற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். 14-வது நிதிக் குழுவில் நிதி பெறுவதில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்யும் விதத்தில் 2,000 கோடி ரூபாய் சிறப்பு உதவி அளித்திட வேண்டும். 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டிற்கான செயல்முறை மானியம் மற்றும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியத்தினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகை 940 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை 4,458 கோடி ரூபாயும் விரைந்து வழங்கிட கோரிக்கை வைத்தேன்.
மருத்துவக் கல்லூரி...
மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதி மற்றும் மானிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களின் மூலமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி தரவேண்டும். பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு திட்ட அறிக்கைகளுக்கு உரிய அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
தொழில்நுட்ப உதவிகள்...
புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் தமிழக கடலோர மாவட்டங்களில் மின் விநியோகத்தினை பூமிக்கடியில் பதித்து விநியோகம் செய்யத் தேவையான 7,000 கோடி ரூபாய் நிதி வழங்கிடவேண்டும். ஏழை எளியோருக்கு 8 லட்சம் வீடுகள் வழங்கவும், குறிப்பாக, கஜா புயலினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் இரண்டு லட்சம் வீடுகள் கட்டவும் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். சென்னையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி 7,000 கோடி ரூபாய் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் சென்று காணாமல் போகும் தருணத்தில் அவர்களை மீட்கும் பொருட்டு ஹெலிகாப்டர் தளம் அடங்கிய இந்திய கடற்படை தளம் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு பிரதமர் அவர்களை இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வில் இருந்து...
தமிழ்நாட்டில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையினை போக்க செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு குறிப்பாக பேரூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் நலன் கருதி இனி மருத்துவ மாணவ சேர்க்கைக்கு நீட் தேர்வினை தொடராமல் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விவசாய விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விவசாய பெருமக்கள் சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் விதமாக, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு தற்போது 10 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி உதவியினை அளிக்க வேண்டும்.
இந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் நிரூபர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கண்ட கோரிக்கைகளை நிதிஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டினார். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நிதியுதவி கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.