எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிங்ஸ்டன் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, விஹாரி சிறப்பான பேட்டிங்கும், பும்ராவின் அபார பந்து வீச்சிலும் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுல் (13 ரன்), அடுத்து வந்த புஜாரா (6 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் மயங்க் அகர்வாலும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். மயங்க் அகர்வால் 55 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே களம் கண்டார்.
மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி தனது 22-வது அரைசதத்தை நிறைவு செய்தார். கோலி 55 ரன்களில் இருந்த போது, கெமார் ரோச்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி இருக்க வேண்டியது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்பையும் வெஸ்ட் இண்டீஸ் வீணாக்கி விட்டபடியால் அவர்களால் அப்பீல் செய்ய முடியவில்லை. இதற்கிடையே ரஹானே 24 ரன்களில் (55 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார்.
அடுத்து ஹனுமா விஹாரி வந்தார். அணியின் ஸ்கோர் 202 ரன்களாக உயர்ந்த போது கோலி (76 ரன், 163 பந்து, 10 பவுண்டரி) ஹோல்டரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஹாமில்டனிடம் சிக்கினார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், விஹாரியுடன் கைகோர்த்தார். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும், ரிஷாப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹோல்டர் வீசிய பந்தை சந்தித்த ரிஷாப் பண்ட் (27 ரன்) பந்து ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் என்று நினைத்து தடுத்து ஆட முற்பட்டார். ஆனால் இன்ஸ்விங் ஆன பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. 7-வது விக்கெட்டுக்கு வந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னில் வீழ்ந்தார். அவர் கார்ன்வால் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.
நிதானம் காட்டிய விஹாரி 3-வது அரைசதத்தை கடந்து நிலைத்து நின்று அசத்தினார். அவருக்கு 79 ரன்னில் இருந்த போது நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பினார். 126 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்து இருந்தது. தொடர்ந்து 8 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சர்மா 80 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் எடுத்து அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய போது பிராத்வெயிட் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய சமி வந்த வேகத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் ஸ்கோர் 416 ரன்களாக உயர்ந்த போது விஹாரி (111 ரன், 225 பந்து, 16 பவுண்டரி) ஹோல்டரின் பந்து வீச்சில் ரோச்சிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 416 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், கார்ன்வால் 3 விக்கெட்டும், பிராத்வெயிட், ரோச் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பெல் களம் இறங்கினர். இந்திய அணியின் அபார பந்து வீச்சில் ஆட்டத்தின் 6.4வது ஓவரில் ஜான் கேம்ப்பெல் 10 (38) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய பிராவோ, ப்ரோக்ஸ், ரோஸ்டன் சேஸ் அடுத்தடுத்து விகெட்களை பறிகொடுத்தனர். அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் களம் இறங்கிய ஹெட்மயர் (34), ஜாசன் ஹோல்டர் (18) தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். தொடர்ந்து பும்ரா தனது அபார வீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹமில்டன் 2 ரன்களுடனும், கான்வால் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்களும், சமி ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.