எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இந்தியா முழுவதும் ஒரே ரேசன் கார்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக டெல்லியில் நேற்று மாநில அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய அரசு சில முக்கிய திட்டங்கள், சேவைகளை நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான திட்டமாக மாற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் “ஒரே ரேசன் கார்டு” அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது ஒவ்வொரு மாநிலமும், தங்களது துறைகள் மூலம் பொதுமக்கள் ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்கு வெவ்வேறு விதமான நடைமுறைகளை கடைபிடித்து வருகிறது. வடமாநிலங்களில் பொது வினியோகத் திட்டத்தில் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் வகையில் ரேசன் கடைகள் இயங்குகின்றன.
ஆனால் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரிசியை வழங்கும் வகையில் பொதுவினியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது.
மத்திய அரசின் தீவிர முயற்சி காரணமாக ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள், “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட் டத்தில் தங்களை இணைத்துள்ளன. மற்ற மாநிலங்களையும் இந்த பொது வினியோக திட்டத்துக்குள் இணைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டம் அமல் படுத்தப்பட்டால் எத்தகைய இடையூறுகள் ஏற்படும்? அந்த இடையூறுகளை எப்படி தவிர்க்கலாம்? என்று விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் “ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதிக்க நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி விஞ்ஞான் பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, பொது வினியோகத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதித்தனர். அதன்பின்னர் இந்த திட்டத்தை எதிர்காலத்தில் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்களும் விரைவில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று பல்வேறு தரப்பு நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி வினியோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஒரே விதமான கார்டு கொண்டு வந்தால் அது தமிழகத்தின் உணவுத்துறை திட்டங்களை முழுமையாக சிதைத்து விடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம், தமிழ்நாட்டு மக்களில் அனைத்துத் தரப்பினரும் ஏதாவது ஒரு பொருளை ரேசன் கடைகளில் இருந்து பெறுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
ஏழை-எளிய மக்கள் அரிசியையும், நடுத்தர மக்கள் மற்ற பொருட்களையும் ரேசன் கடைகளில் இருந்து வாங்குகிறார்கள். ஒரே ரேசன் கார்டு திட்டம் வந்தால் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அது பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இவை தவிர ரேசன் கார்டுகள் மூலம் பல மக்கள் நல திட்டங்களையும், இலவச திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டத்தால் தமிழ்நாட்டில் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக கருத்து உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் ரேசன் அட்டைகள் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு விட்டதாலும், குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதாலும் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழக அரசால் மிக, மிக எளிதாக அமல்படுத்த முடியும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை கொண்டு வர முடியுமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார