எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் சிறப்புடன் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்புமக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் மூலம் பயனாளிகள் 971 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நேற்று வெகு சிறப்புடன் நடைபெற்றது.அதன்படி திருமங்கலம் தாலுகாவில் அ.கொக்குளம் கிராமம்,பேரையூர் தாலுகாவில் பேரையூர் பேரூர்,கள்ளிக்குடி தாலுகா குராயூர் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர் தலைமை வகித்தார்.மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,கள்ளிக்குடி வட்டாட்சியர் மூர்த்தி,பேரையூர் வட்டாட்சியர் ஆனந்தி ஆகியோர் வரவேற்றனர்.
ஏழை,எளியோர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் கீழ் திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் வட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் 971 பேருக்கு முதியோர் உதவித் தொகை,வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல் உட்பிரிவு,ஆதரவற்ற விதவைச் சான்று,மினிகிட் துவரை,முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட ரூ.2கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பெற்றுக் கொண்டு அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக அ.கொக்குளம்,காரைக்கேணி, குராயூர் ஆகிய கிராமங்களுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பூரணகும்ப மரியாதை செய்தும்,வெற்றி குலவையுடன் ஆரத்தி எடுத்தும் அன்புடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழக முதலiமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.இதற்காக தமிழகம் முழுவதிலும் அலுவலர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதில் 5லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல் 5ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபணை இல்லாத ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆட்சேபணை உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடங்கள் வழங்கிடவும்,இடம் இல்லையென்றால் தனியார் இடத்தினை கொள்முதல் செய்து அவர்களுக்கு இடம் வழங்கப்படவுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.தென்மேற்கு பருவமழைகாலம் இன்னும் முடியவில்லை.காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போது மழை பொழிவு அதிகமாக இருக்கும்.தற்போது பெய்கிற மழை தற்காலிகமாகத்தான் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை என்பது ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகிய பகுதிகளில் தொடர்கனமழையாக இருக்கும்.வடகிழக்கு பருவமழையின் போது தான் நமக்கு தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக,சூறாவளியாக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.ஆதலால் அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களில் ஏற்படும் மழைப்பொழிவு 48சதவீதம் நமக்கு குடிநீருக்காகவும்,விவசாயத்திற்காகவும் பயன்படுகிறது. அதற்காகத்தான் ரூ.700கோடிக்கு மேல் குடிமராமத்து திட்டத்திற்காக முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார்.அதே போல் ஊராட்சி உள்ளாட்சி மற்றும் நகராட்சிளில் உள்ள கண்மாய்களை தூர்வாருவதற்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.288கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக பொதுப்பணித்துறையில் எங்கெல்லாம் பைப் கல்வெர்ட் உள்ளதோ அதை பாக்ஸ் கல்வெர்ட் ஆக மாற்றிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதன பேரில் 32வருவாய் மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் 121 நிவாரண பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்கள் இல்லாத பகுதிகளிலும் பள்ளி,திருமண மண்டபம் ஆகியவை அடையாளம் காணப்பட்டு வருகிறது.மழை காலங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான தங்கும் இடம்,உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்து தரப்படும்.தமிழகம் முழுவதும் 4199 பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அதை வரைமுறைப்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.கடலோர மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று நேரடி ஆய்வுகள் செய்து வருகிறோம். வருகிற வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்திடும் மழைநீரை சேமித்து வைக்கும் அளவிற்கு அனைத்து ஆயத்தப் பணிகளையும் தயார் நிலையில் வைத்துளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முகாம்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஜெயராமன்,வேலுச்சாமி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,போத்திராஜா,மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைச் சேர்மன் சதீஸ்சண்முகம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் யூனியன் துணை சேர்மன்பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,தர்மர்,பாஸ்கரன்,ராமகிருஷ்ணன், செல்வமணி செல்லச்சாமி,கல்யாணி,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம்,முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,அவை தலைவர் வேல்பாண்டி,அம்மா பேரவை வேல்ராமகிருஷ்ணன், சின்னஇருளப்பன்,முருகன்,அழகர்,அன்னமுத்து,வில்லூர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி,சுகுமார்,சாமிநாதன்,கட்டாரி வேல்முருகன்,சிவன்காளை,காமதேவன்,சிங்கராஜபாண்டியன்,கொடிவைரன்,முத்து,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
மணிப்பூரில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
28 Apr 2024இம்பால், மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா தெரிவித்து உள்ளார்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.