எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,- மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவை இணைக்கு வகையில் பாம்பன் கடலில் இரு வழியில் ரயில் செல்லும் பாதை கொண்ட புதிய ரயில்பாலமும்,கப்பல்கள்,விசைப்படகுகள் கடந்து செல்வதற்கு அதி நவீன தெழில்நுட்பத்துடன்கூடிய தூக்குப்பாலம் அமைப்பதற்கு கட்டும் பணிகள் துவங்க நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
. உலக புகழ்பெற்ற புனித ஸ்தலமாகவும் சுற்றுலா தலமாகவும் ராமேசுவரம் விளங்கி வருகிறது.இந்த ஸ்தலமானது உலக நாடுகளில் முக்கியம் வாய்ந்தவையாகும்.புனித ஸ்தலமான ராமேசுவரம் நான்கு பக்கமும் கடல் நீரால் சூழ்ந்து தீவுப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியை உலக நாடுகளில் பல பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ராமேசுவரம் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலை தூரத்தில் அமைந்துள்ள பாம்பன் பகுதியில் பாக்ஜலசந்தி கடல் மேல் கடந்த 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ரயில் பாலம் அமைத்தனர்.இந்த பாலத்தில் மீட்டர்கேச் ரயில் பாதையாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிராட்கேஜ் ரயில் பாதையாக மாற்றம் செய்து தற்போது பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.அதுபோல மன்னார் வளைகுடா கடல் பகுதியையும்,பாஜ்சலசந்தி கடல் பகுதியை இணைக்கு வகையில் இரு புறமும் இருந்து இந்த கடல் வழியாக கப்பல்கள் கடந்து செல்வதற்காக பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலம் என்ற தூக்குபாலம் அமைக்கபப்ட்டுள்ளது. இந்த தூக்கும் பாலம் 105 ஆண்டுகளை கடந்த இந்தப் பாலம் கடலில் வீசும் உப்புக் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு சமீப காலமாகப் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இதனால் இந்த தூக்கு பாலத்தை திறந்து மூடுவதில் ரயில்வே துறைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.இதனால் இவ்வழியாக வணிக ரீதியாக செல்லும் கப்பல்கள்,சிறிய பயணிகள் கப்பல்கள் செல்ல முடியாமல் இலங்கை வழியாக சுற்றி செல்கிறது.இதனால் செலவீண தொகை அதிகமாக ஏற்பட்டு வருகிறது.மேலும் இந்த ரயில் பாலம் 100 ஆண்டுகளை கடந்ததால் பாலத்தின் தன்மையும்.வலுவும் குறைந்து வருகிறது.இதை ரயில்வே துறை பொறியாளர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.இதனை தொடர்ந்து ரயில்வே துறை நிர்வாகம் இந்த பாலத்தின் தன்மை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.அதன் பேரில் ராமேசுவரத்தின் முக்கியத்துவம் மற்றும் தன்மையறிந்து மத்திய அரசு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்து அதற்கு முதல் கட்டமாக ரூ.246 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.இந்த பணிகள் தொடங்குவதற்கு பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கன்னியாகுமாரியில் நடைபெற்ற ஒரு விழாவில் அடிக்கல் நாட்டினார்.இதனையடுத்து கடலில் பவளப் பாறைகளுக்குப் பாதிப்பின்றி புதிய ரயில் பாலம் அமைக்க பணிகள் தொடங்க ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் இறுதியாத பணிகள் தொடங்க நேற்று மண்டபம் பகுதியிலிருந்து ரயில் பாலம் தொடங்கு பகுதியில் பணிகள் துவங்க தனியார் பாலம் கட்டும் நிறுவனம் சார்பில் பூமி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் அகமதாபாத் பகுதியை சேரந்த தனியார் நிறுவனமான ரஞ்சித் பில்டர்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி முகேஷ்பட்டேல் தலைமை வகித்து 9.28 மணிக்கு பூஜை தொடங்கி வைத்தார்.பின்னர் அப்பகுதியில் இயந்திரம் மூலம் மணல் பரிசோதணை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் சென்னை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, புதிய பாலத்திற்கான தொழில்நுட்ப அலுவலர்கள் அன்பழகன், ராஜேந்திரன், பாலப் பணிகளை மேற்கொள்ள உள்ள அப்துல்சமத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்று வகையாக திறக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தூக்குபாலம்:
மண்டபம் பகுதியிலிருந்து ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2 கி.மீ தொலைதூரத்திற்கு கடலின் இடையே 60 அடி நீளத்திலும்,12 மீட்டர் அகலத்தில் இரண்டு வழியில் ரயில் செல்லும் வகையாகவும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் வரிசையாக மூன்று தூண்கள் அமைத்து 99 இடங்களில் 99 தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த தூண்களில் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டு அதற்கு மேல் இரும்பு கட்டைகள்,தண்டவாளங்கள் அமைக்க உள்ளன. தற்போதைய உள்ள ரயில் பாலத்திலிருந்து துவக்கத்தில் 30 மீட்டர் தூரத்திலும், நடுவில் 50 மீட்டர் வரையிலான தூரத்திலும்,முடிவில் 30 மீட்டர் தூரத்திலும் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. இதில் கப்பல்கள்,பெரிய மீன்பிடி விசைப்படுகள் இழுகுவாக கடந்து செல்லும் அளவிற்கு சுமார் 22 மீட்டர் உயரத்துடன் அமைக்கபடவுள்ளன. இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் மற்றும் மனித சக்தி என 3 வகையாக திறக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு அமைக்கபடவுள்ளது.கடலின் அடியில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப தூண்களின் ஆழம் தேவையான அளவில் அதிகரிக்கப்படும் எனவும்,மேலும் பாம்பன் கடலில் தொடங்கப்பட உள்ள இந்தப் புதிய பாலத்தின் பணிகளில் 200 முதல் 600 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும், நிர்ணயம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் எனவும் பாலப் பணிகள் மேற்பார்வையாளர் அப்துல்சமது தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர்
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்து: கேரளாவில் சிறுவன் உள்பட 5 பேர் பலி
30 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியானார்கள்.