முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கில் போரில் சிறப்பாக செயல்பட்ட மிக் -27 ரக போர் விமானம் ஓய்வு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

இந்திய விமானப் படையில், முப்பது ஆண்டுகளாக சேவை செய்து, கார்கில் போரில், எதிரிகள் மீது குண்டுமழை பொழிந்த, மிக்-27 ரக போர் விமானம், நேற்றுடன் ஓய்வு பெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள விமான படை தளத்தில், மிக்-27, நேற்று இறுதியாக பறந்து, பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியது. இதையொட்டி நடைபெற உள்ள விழாவில், ஏர் மார்ஷல் எஸ்.கே. கோட்டியா உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறியதாவது;

கடந்த,1985-ல், மிக்-27 போர் விமானம், விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்தப் போர் விமானம், தரைப்படைக்கு பக்கபலமாகவும், துல்லியமாக குண்டு வீசி, எதிரிகளின் அழிக்கும் திறன் கொண்டது. கடந்த, 1999-ல் நடைபெற்ற கார்கில் போரில், மிக் -27 சிறப்பாக செயல்பட்டு, பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தகர்த்தது. மணிக்கு ஆயிரத்து 700 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட விமானம், 4 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை படைத்தது. கிட்டதட்ட 40 ஆண்டுகாலம் நமது வான் எல்லை பாதுகாவலனாக இருந்த மிக் 27 போர் விமானங்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கடைசி ஸ்குவாட்ரானில் உள்ள 7 விமானங்களும் நேற்றுடன் ஓய்வு பெற்றன. மேலும் இந்திய விமான படை விமானிகளால் பகதுார் என, செல்லமாக அழைக்கப்படும் மிக்-27  போர் விமானம் இறுதியாக விடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து