எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சி : மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-கேள்வி:- தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து....
பதில்:- மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் நோய் தொற்று இருக்கிறதோ, அங்கெல்லாம் நடமாடும் மருத்துவக் குழு, அந்த பகுதிக்கே சென்று, அப்பகுதிகளில் உள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று அறிகுறி இருந்தால் அவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ்வாக இருந்தால், மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைய செய்கிறார்கள்.
கேள்வி:- தென் மாவட்டங்களில் கீழடி போன்ற பகுதிகளில் அகழ்வராய்ச்சி பணிகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் பாலாற்று கரையோரங்களில் பழவேரி போன்ற கிராமங்களில் 5000 ஆண்டுகள் பழைமையான பொருட்கள் கிடைக்கிறது. அங்கு அகழ்வராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுமா?
பதில்:- ஒவ்வொரு பகுதியாக அகழ்வராய்ச்சி செய்து வருகிறோம். நீங்கள் சொல்கின்ற கருத்தையும் அரசு பரிசீலிக்கும். கேள்வி:- மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து எப்போது தொடங்கும்?
பதில்:- கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அது குறைந்த பிறகு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கப்படும்.
கேள்வி:- பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி இல்லை, சிகிச்சை பெறுவதற்கு செங்கல்பட்டிற்கு தான் செல்ல வேண்டியிருக்கிறதே?
பதில்:- ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதில் எந்த குறைப்பாடும் இல்லை. எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தான் அம்மாவின் அரசின் திட்டம். அந்த அடிப்படையில் வரலாற்று சாதனையாக தமிழ்நாடு முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை நாங்கள் துவக்கி இருக்கிறோம்.
அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை மூலமாக பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இங்கேயும் மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்.
கேள்வி:- பட்டுப் பூங்கா பணிகள் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதே?
பதில்:- அறிஞர் அண்ணா பட்டுப் பூங்கா பற்றி சொல்கிறீர்கள். இப்போது 25 சதவிகித பணிகள் முடிவடைந்திருக்கிறது. எஞ்சிய பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கேள்வி:- பட்டு கூட்டுறவு சங்கங்களில் 96 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி இருக்கின்றன. அதை அரசு கொள்முதல் செய்தால் நெசவாளர்களுக்கு உதவியாக இருக்குமே?.
பதில்:- இது ஒரு சோதனையான காலம். கொரோனா தொற்று இருக்கின்ற சூழ்நிலையில் நான்கு ஐந்து மாத காலமாக எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. தற்போது தான் திறந்து இருக்கிறார்கள்.
படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இயல்பு நிலைக்கு வருகின்ற போது இந்த பட்டு சேலைகள் எல்லாம் விற்பனையாகி விடும்.
கேள்வி:- காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் அருகே கீழ்கதிர்பூரில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படாமல் கிடப்பில் இருக்கிறதே?பதில்:- அவை மாதிரிக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள். தற்போது கூட 2112 வீடுகள் ஆற்றின் கரையோரம் இருக்கின்ற மக்களுக்காக கட்டி கொடுத்து இருக்கிறோம்.
பல வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. லட்சக்கணக்கான வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு கட்டுவதற்காக அரசால் திட்டம் தீட்டப்பட்டு, எல்லா மாவட்டங்களிலும் வீடுகள் கட்டுகின்ற திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- காஞ்சிபுரம் நீதிமன்ற கட்டிடம் பழைமையான கட்டிடடமாக இருக்கிறது. நகர்ப்புரத்தில் இருக்கிறது. போக்குவரத்திற்கு நெரிசலாக இருக்கிறது. இதை விரிவுபடுத்துவதற்கான திட்டம் இருக்கிறதா?
பதில்:- காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
கேள்வி:- அனைத்து நெசவாளர்களுக்கும் கொரோனா நிதி வழங்கப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஆனால் 7 ஆயிரம் பேருக்கு தான் நிதி வழங்கப்பட்டுள்ளதே?
பதில்:- நெசவாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு தான் கொடுக்க முடியும். பதிவு செய்யாதவர்களுக்கு எப்படி நிதி கொடுக்க முடியும். நாளைக்கு ஆடிட்டிங்கில் பிரச்சனை வரும். இதற்கு கணக்கு இருக்கிறது. யார் யாரெல்லாம் பதிவு செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் நிதி அளிக்க முடியும்.
கேள்வி:- ஆண்டுதோறும் சுத்தமான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் தமிழக நகரங்கள் பின்தங்கி உள்ளதே. தமிழக நகரங்கள் சுத்தமாக இல்லையா?
பதில்:- எந்த அடிப்படையில் சுத்தமாக இல்லை என்று சொல்கிறீர்கள். ஏற்கனவே இருந்த அரசாங்கத்திற்கும் இப்போதுள்ள அரசாங்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள். அம்மாவின் அரசு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகரங்கள் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு தான் எல்லா பெருநகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு எல்லா நகரங்களிலும் சாலை வசதிகள், தெரு விளக்கு வசதிகள், கழிவுநீர் அகற்றும் வசதிகள், கால்வாய் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கேள்வி:- ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காலம் முடியப் போகிறதே?
பதில்:- இதுகுறித்து ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெளிவுப்படுத்தி விட்டார்.
கேள்வி:- காஞ்சிபுரத்தில் ஜரிகை ஆலை நவீனப்படுத்தாமல் இருக்கிறதே?. பட்டு நெசவாளர்களுக்கு ஜரிகைகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறதே?.
பதில்:- அது குறித்து அரசு பரிசீலிக்கும். அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி பட்டு நெசவாளர்களுக்கு தேவையான ஜரிகைகள் அனைத்தும் எதிர்காலத்தில் கிடைப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.