எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம், ஜூலை6 -250 ஆண்டுகளுக்கு பிறகு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று காஞ்சிபுரம் தேவராஜசுவாமி (ஸ்ரீவரதராஜபெருமாள்) திருக்கோவில். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சுவர் ஓவியங்கள் பழமையான கல்வெட்டுக்கள் போன்றவற்றை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் 2 ராஜகோபுரங்கள், பல சிறிய கோபுரங்கள் மற்றும் 5 பிரகாரங்களை கொண்டுள்ளது. முதலாம் ராஜராஜசோழனால் கி.பி.1018 -1054ம் ஆண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
காயத்திரி மந்திரத்தின் தத்துவத்தை விளக்கும் வகையில் 24 படிகள் கொண்ட அஸ்தகிரி என அழைக்கப்படும் திருமலையில் புண்ணியகோடி விமான மத்தியத்தில் நின்ற திருக்கோலத்தில் மூலவர் எம்பெருமாள் காட்சி தருகிறார். மேலும் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பு 24 ஏக்கர். கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் படிகட்டுகள் 24. கொடி மரத்தில் உள்ள அடுக்குகள் 24. மதில் சுவரில் உள்ள கற்களின் அடுக்குகள் 24 ஆகும். கோவில் வளாகத்தில் 14 ஏக்கர் பரப்பில் 3 தோட்டங்கள் உள்ளன. அனந்தசரஸ் மற்றும் பொற்றாமரை என்ற 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் நகைகள் பெருமாளுக்கு சொந்தமாக உள்ளன. பெரிய தேர், 45 சிலைகள் கோவிலுக்கு சொந்தமாக உள்ளன. தற்போது இந்த கோவிலில் 5 கால பூஜை நடந்து வருகிறது.
இப்படி பல வரலாற்று சிறப்புகளையும் புகழையும் பெற்ற இந்த கோவிலில் முழுமையாக கும்பாபிஷேகம் நடந்து 250 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே மனக்குறைவை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே இந்த குறையை போக்க வரதராஜ பெருமாள் கோவிலில் முழுமையாக திருப்பணி செய்ய கடந்த 2007ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிக்காக ரூ.1 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிதியை வைத்தும் நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்ற பல கோடி ரூபாய் நிதியை வைத்தும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருந்தேவி தாயார் சன்னதிக்கு தங்க விமானம் உருவாக்கும் திருப்பணி சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், கிழக்கு ராஜ கோபுரம் மற்றும் மேற்கு ராஜ கோபுர திருப்பணிகள் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலும் 100 கால் மண்டபம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டன. கோவில் கிழக்கு ராஜகோபுர வாசல் 150 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு புதிய வாசல் கதவுகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளன.
அதுமட்டும் அல்லாமல் மூலவர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. திருப்பணிக்கான மொத்த மதிப்பீடு சுமார் ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததாகவும் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ந்தேதி நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று 5-ந்தேதி காலை 11 மணிக்கு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் (ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்) வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பாபிஷேக அங்குரார்ப்பணம் நடந்தது. 2-ந்தேதி முதல் 5ந்தேதி வரை 4 நாட்களுக்கு யாகசாலை பூஜைகள் நடந்தன. பூஜையில் அமிர்தவள்ளி தாயார் எம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புரணாஹுதி தீர்த்தம் சடாரி 81 கலச திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு 4-ம் நாள் யாகசாலை பூஜை தொடங்கியது. ஸ்ரீபெருமாள் நித்யபடி திருவாராதனம் நிவேதனம் நடந்தது. 8 மணிக்கு ஸ்ரீபெருமாள் ஸ்ரீதாயார் யாகசாலைக்கு எழுந்தருளினர். அங்கு துவார கும்ப மண்டல திருவாராதனம் நிவேதனம், பெருமாள் திருவாராதனம் ஹோமங்கள் நடந்தன. 10.30 மணிக்கு மஹா பூரணாஹுதி யாத்ராதானம் கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேற்கு ராஜ கோபுரம் கிழக்கு ராஜ கோபுரம் தாயார் தங்க விமானம் புண்ணியக்கோட்டி விமானம் 100 கால் மண்டபம் மூலவர் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அப்பொது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சி வரதா... காஞ்சி வரதா... கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர். கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பெருமாள் தாயாருடன் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். அங்கு திருவாராதனம் நிவேதனம் வேதப்ரபந்த சாத்துமறை தீர்த்தம் சடாரி கோஷ்டி ஆகியவை நடந்தன. மாலையில் கோவில் மாட வீதிகளில் பெருமாள் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து இரவு பெருமாள் திருமலைக்கும் தாயார் சன்னதிக்கும் எழுந்தருளினர்.
ஸ்ரீஅஹோபில மடம் செலவு ஏற்பு!
கும்பாபிஷேகத்திற்கான அனைத்து செலவுகளையும் ஸ்ரீஅஹோபில மடம் 45-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. உத்திரமேரூர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், மத்திய எஃக்கு வாரிய உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஸ்ரீஅஹோபில மடம் 45வது பட்ட ஜீயரின் பேரன்கள் சேஷாத்திரி சம்பத் வரதராஜன் வக்கீல்கள் வாசுதேவன் ரேவதி, அதிமுக நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.ரங்கநாதன், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.வள்ளிநாயகம், அத்திவாக்கம் எஸ்.ரமேஷ், ராஜசிம்மன், தென்னேரி என்.எம்.வரதராஜுலு, படுநெல்லி வி.தயாளன், தொழிலதிபர்கள் எம்.வி.எம்.பி.அப்பர், வி.கே.தாமோதரன், ஆர்.சரவணன், ஆர்.கணேஷ், வி.பன்னீர்செல்வம், கவிஞர்.கூரம்.துரை, மெடிக்கல்.பி.தீனா, கே.வீரராகவன், கோவில் நிர்வாக அதிகாரிகள் பு.மு.வேதமூர்த்தி, கண்ணபிரான் வேலரசு வி.கே.சரவணன் உள்பட திரளான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் ப.ராஜா காஞ்சீபுரம் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான என்.தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் நன்கொடையாளர்கள் பக்தர்கள் வெகு விமர்சையாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) கணேசமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் ஆகியோர் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு வி.பாஸ்கரன், துணை சூப்பிரண்டு வி.சந்திரசேகரன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் வேலூர் ஆகிய 6 மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உள்ளூர் அரசு விடுமுறை!
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று (5.7.12) ஒரு நாள் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 14ந்தேதி பணி நாளாக அறிவித்து கலெக்டர் ஹனீஷ்சாப்ரா உத்தரவிட்டிருந்தார்.
உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தது. ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அர்ச்சகர்களை கொட்டிய தேனீக்கள்:
வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பழமைவாய்ந்த கிழக்கு ராஜ கோபுர (பின்பக்க கோபுரம்) கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்வதற்காக அர்ச்சகர்கள் தேவராஜன் சேஷாத்திரி ஆகியோர் புனித நீர் கொண்ட கலச கும்பங்களை தூக்கிக் கொண்டு கிழக்கு ராஜ கோபுரத்தின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோபுரத்தின் 5-வது நிலை உள்பகுதியில் இருந்த தேனீக்கள் அர்ச்சகர்களை பயங்கரமாக கொட்டியது. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் அர்ச்சகர்கள் கோபுரத்தின் மீது ஏறி கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பிறகு கீழே இறங்கி வந்த அவர்கள் தங்களை தேனீக்கள் கொட்டியது குறித்து சக அர்ச்சகர்களிடமும் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தியிடமும் தெரிவித்தனர். பிறகு அவர்கள் மருத்துவ குழுவினரிடம் சிகிச்சை பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி