எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் மதுரை மேற்கு ஒன்றியத்தில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிந்தாமணியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துகுமார் திருப்பங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமசந்திரன், மற்றும் காசிராமன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர். செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் கே.சி.பொன் ராஜேந்திரன், வட்டக் கழக செயலாளர்கள் கருணா, முருகேசன், செல்வம், கருத்தமுத்து, செல்லப்பாண்டி, சரவணன், முத்துக்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் எஸ்.அம்பலம், மாவட்ட துணைச் செயலாளர் சசிகலா , மாவட்டக் இணைச் செயலாளர் சரோஜா,மேலூர் ஒன்றிய செயலாளர் கே.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றி செழியன் , மேலும் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.பி.முத்துகிருஷ்ணன், மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் கே.சி. பி. ஜெயக்குமார், மாவட்டவழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேதுராமன், மாவட்ட, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் பி.செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.கே. ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமில் வி.வி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது;
அம்மாவின் வழியில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை தந்து ஒரு மகத்தான ஆட்சியை முதலமைச்சர் செய்து வருகிறார் அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். இங்கு நடைபெறும் இளைஞர் அணி கூட்டம் என்பது வருகின்ற 2021 தேர்தலுக்கான வெற்றி விழாவின் அச்சாரமாக திகழ்கிறது. இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு அம்மா பேரவை, இளைஞர் அணி, இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவை நான்கு படைகளாக இருந்து திகழ்ந்து வருகிறது. தற்போது உள்ள வைரஸ் நோய் காலகட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி அனைவரும் பாஸ் என்று அறிவித்துள்ளார் அதுமட்டுமல்லாது அரியர்ஸ் தேர்வில் மட்டும் ஏழரை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
அண்ணா இருமொழிக் கொள்கையில் திடமாக இருந்தார் நாடாளுமன்றத்தில் அண்ணா பேசும் போது சிலர் குறுக்கிட்டு பெரும்பாலான மாநிலங்களில் இந்தி இருக்கும்போது ஏன் இந்தியை ஆட்சி மொழியாக இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணா நமது இந்தியாவில் காக்கை அதிகமாக உள்ளது அதற்காக தேசிய பறவையாக காக்கையை ஆக்க முடியுமா என்று பதிலளித்தார். அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் ,புரட்சி தலைவி அம்மா ஆகியோரை பின்பற்றி இருமொழிக் கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.
சட்டசபையில் முதலமைச்சர் நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி வரலாற்றை உருவாக்கினார்.
இந்த ஆட்சியில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. எங்கேயும் மின்வெட்டு இல்லை, ஜாதி மத கலவரம் இல்லை, சாலை வசதி , குடிநீர் வசதி உள்ளிட்ட என் எல்லா அடிப்படைத் தேவைகளும் 100 சகவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க பல்வேறு சட்டங்களை முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.
தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி அல்ல. இந்த இயக்கத்தில் சோதனை வரும். ஆனால் இறுதியில் இந்த இயக்கம் வெற்றி பெறும். இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை சிந்தி இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள்.
1981,1991,2001,2011, ஆகிய ஆண்டுகளில் எல்லாம் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. அதே வரிசையில் வருகின்ற 2021 ஆண்டில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். இளைஞர்கள் நீங்கள் அ.தி.மு.க.வின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இந்த வெற்றிக்கு உங்கள் பங்கு மகத்தானது இருக்கவேண்டும் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.