எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாட்ரிக் சாதனை படைத்த முதல்வருக்கு நன்றி: அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தீர்மானம்
மதுரை : அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் என்ற செல்வம், பா.நீதிபதி, மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. தமிழரசன், அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன்,செல்லம்பட்டிராஜா, பிச்சைராஜன், நகரச் செயலாளர் பூமாரராஜா, பேரூர் செயலாளர்கள் கொரியர் கணேசன், அழகுராஜா, குமார், நெடுமாறன், பாலசுப்ரமணி, மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், சிங்கராஜ பாண்டியன் ,பால்பாண்டி, காசிமாயன் ,லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
இந்தியாவிலே அன்னை தமிழகத்தை முதன்மை தேசமாக உருவாக்கும் வண்ணம் இரவு பகலாக மக்களுக்காக பணியாற்றி அம்மாவை எண்ணத்தை நனவாக்கும் வண்ணம் இன்றைக்கு தொடர்ந்து மூன்றாம் முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்கும் வகையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் இருந்து வருகின்றனர். மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது அப்போது மதுரைக்கு குடிநீர் பிரச்சினை தீர்க்கும் வண்ணம் 1200 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணியினை முதல்வர் அறிவித்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகின்ற 4-ம் தேதி மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதனை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதே போல் 33 கோடியில் வெள்ளை மாளிகை போல் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெறுகிறது. இதனையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். மதுரைக்கு வருகை தரும் முதல்வருக்கு அம்மா பேரவை சார்பிலும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பிலும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் இதயத்தை ஆசியோடு நடைபெறும் அம்மா கிச்சன் 150 நாளை அடைந்துள்ளது. இந்த 150 நாளில் மூன்று வேளை உணவு, இருவேளை தானிய உணவுகள் வழங்கப்பட்டன. இதுவரை 9 லட்சம் உணவு பொட்டலங்களும், 6 லட்சம் தானிய பொட்டலங்களும் ஆக மொத்தம் 15 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் நோய்தொற்று 18 சதவீதமாக இருந்தது முதல்வர் பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். அதன்படி மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்பட்டதால் இன்றைக்கு இந்த தொற்றுநோய் 0.5 சகிதமாக மதுரை மாவட்டத்தில் உள்ளது.
தற்பொழுது உணவு தேவை எழவில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரும், மருத்துவ குழுவும் கூறியுள்ள நிலையில் தற்போது அம்மா கிச்சன் நிறைவு பெறவுள்ளது. இது நிரந்தரமாக அல்ல. தேவை ஏற்பட்டால் மீண்டும் அம்மா கிச்சன் திறக்கப்படும். சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புயலில்களில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து உயிர் சேதம் இல்லாமல் பொருள் சேதம் இல்லாமல் தமிழகத்தை முதல்வர் காப்பாற்றி உள்ளார். இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் செய்திராத வகையில் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்துஅறிவுரை வழங்கினார் முதல்வர்.
அதுமட்டுமல்லாது நீர் நிலைகளை ஆராய்ந்து கண்காணித்து அதற்கு தகுந்தார்போல் உபரி நீரை வெளியேற்றி தற்போது மழைநீர் வீணாகாமல் அனைத்து நீர்நிலைகளிலும் 100 சகவீதம் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் தற்பொழுது குறைந்த காற்றழுத்த மண்டத்தால் புதிதாக புயல் ஏற்படும் சூழல் உருவாகவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தொடர்ந்து அது கேட்டு நடவடிக்கையை முதல்வர் முன்கூட்டியே எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையை கண்டு பாரத பிரதமரும், உள்துறை அமைச்சரும் பாராட்டி வருகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது கூட கனிமொழி எடப்பாடியில் பிரச்சாரம் செய்யப் போவதாக கூறியுள்ளார். கனிமொழி விண்வெளிக்கு சென்று பிரச்சாரம் செய்தால் கூட ஒருபோதும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது. தி.மு.க. ஓட்டுக்காக தன் மக்களை சந்திப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. தினந்தோறும் மக்களை சந்தித்து அவர்களின் தேவையை அறிந்து செயல்படும் அரசாக அம்மா அரசு திகழ்கிறது.
தி.மு.க. மக்களை குழப்பி திசை திருப்பி முதல்வர் செய்யும் சாதனைத் திட்டங்களை மறைக்க முயற்சி செய்கிறது. அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் மக்கள் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பு தான் வருகின்றனர். ஆகவே தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் பொதுமக்களிடத்தில எடுபடாது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானத்தை அமைச்சர் ஆர் .பி உதயகுமார் நிறைவேற்றினார்.
இந்தியாவிலே உள்ள 29 மாநிலங்களில் அன்னை தமிழகத்தை முதன்மை தேசமாக உருவாக்குவேன் என்ற அம்மாவின் சபதத்தை நனவாக்கும் வண்ணமும், இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் தெய்வ வாக்கை தங்களின் இலட்சிய முழக்கமாக கொண்டு முதல்வரும், அவருக்கு உறுதுணையாக துணை முதல்வரும் இரவு பகல் பாராது அயராது பாடுபட்டு வருவதை தமிழ்ச் சமுதாயம் நன்கு அறியும்.
உலகில் உள்ள 200 நாடுகள் அஞ்சி நடுங்கிய கொரோனோ என்ற வைரஸ் நோயை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி ,தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகாகவும், நிவாரண உதவி வழங்கிடவும் தமிழக அரசின் சார்பில் 7,525 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மக்களை காத்திட்டு இதன் மூலம் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் தமிழகத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாரதப் பிரதமரின் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாது, தற்பொழுது நிவர் புயலில் இருந்து மக்களைக் காத்திடும் வண்ணம் புயலை காட்டிலும் அதிவேகமாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமலும்,பொருள் சேதம் ஏற்படாமலும் காத்திட்டு இதன் மூலம் பாரதப் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் பாராட்டைப் பெற்று இயற்கை சீற்றங்களில் இருந்து எப்படி மக்களை காப்பது என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கியும்,
இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் இருந்த போதிலும் தனது அயராத உழைப்பால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 8.03 சதவீதம் உயர்த்தியும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வண்ணம் உலக நாடுகளிலிருந்து புகழ் பெற்ற நிறுவனங்கள் மூலம் தமிழகத்திற்கு தொழில் முதலீடு ஈர்த்து அதன் மூலம்இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் என்று உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாது, இந்த சாதனைகளுக்கு எல்லாம் மணிமகுடமாகும் வகையில் இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் பொருளாதாரம், வேளாண்மை, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவை உள்ளடங்கிய வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு ,ஆளுமைத்திறன், தொழில் முனைவோர் ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளில் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்து அதற்குரிய விருதினை வழங்கி வருகிறது. தற்போது இந்த 2020 ஆண்டில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்ததில் நலத்திட்டங்களில் அக்கறை கொண்டுள்ள அரசு என்றும், சமூக நதியில் பின்தங்கிய மக்களை உயர்த்துவது குறிக்கோளாக கொண்டும், பொது கல்வி சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் 1,263.1 புள்ளியை பெற்று தமிழகம் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தில் உள்ளது என்று விருதினை பெற்றுள்ளது. இதன் மூலம் எட்டரை கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ் தேசததை இந்திய தேசியமே வியந்து பாராட்டும் வகையில் உயர்த்தி காட்டி தமிழினத்திற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த உழவன் வீட்டில் உதித்த விடியல் சரித்திரம் போற்றும் சாமானிய முதல்வர், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பை நனவாக்கிய சமூகநீதிக் காவலர், முதல்வர் எடப்பாடியார், அவருக்கு துணையாக நிற்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஆகியோருக்கு அம்மா பேரவை பொற்பாதம் வணங்கி கோடான கோடி நன்றிகள் காணிக்கையாக்கி வழங்குகிறது. தொடர்ந்து ஏற்கனவே கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டு இரண்டு முறை விருதினைப் பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக தமிழகத்தை சிறந்த மாநிலமாக முதலிடத்தில் உருவாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்த முதல்வரின் சாதனைத் திட்டங்களை அம்மா பேரவை சார்பில் மக்களிடத்தில் எடுத்துரைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியை பெற்றுத் தந்து களப்பணி ஆற்றுவோம் என்று அம்மா பேரவைசூளுரை ஏற்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.