எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவில்பட்டி : விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்து அங்குள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 8.30 மணிக்கு வில்லிசேரி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பருத்தி விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்பவர்கள் விவசாயிகள். விவசாயத்திற்கு முதன்மையாக தேவைப்படுவது தண்ணீர். அதனை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இந்த பிரமாதமான திட்டத்திற்கு ஒட்டு மொத்த பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத ஏரி, குளங்களும், விவசாயிகள் பங்களிப்போடு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவாயிகளுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கிறது. அமெரிக்கன் படை புழு தாக்குதலில் இருந்து மக்காசோளம் பயிர்களை காக்க ரூ.45 கோடியில் அரசே பூச்சி கொல்லி மருந்தை தெளித்தது. புயல், வெள்ளம், வறட்சி என விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து அ.தி.மு.க. அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
பயிர் காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிக இழப்பீடு வழங்கியது தமிழக அரசுதான். கடந்த 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. இவ்வாறாக குழந்தைகளை போல கவனித்து விவசாயிகளுக்கு தேவையானதை அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது. நான் வெளிநாடு சென்று ஆய்வு செய்ததில் 65 லிட்டர் பால் கறக்கும் பசுக்களை பார்த்தேன். அது போல கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வாய் பேசுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்சி மையம் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்நடைகளை பாதுகாக்க அதிக அளவில் கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் ரூ. 4 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. கோவில்பட்டியில் 5 இடங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு காரணமாக ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு 443 ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவார்கள். அவர்களுக்கான அனைத்து படிப்பு செலவையும் அரசே செலுத்தும்.
ஸ்டாலின் பேசும் போது நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று படத்தில் கூறுவது போல எடப்பாடி பழனிசாமி நானும் விவசாயிதான், நானும் விவசாயிதான் என கூறுவதாக பேசி உள்ளார். மு.க.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுகிறார். விவசாயிகளின் மனம் புண்படும்படியாக ஸ்டாலின் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் சிந்தித்து பேச வேண்டும். இதனை விவசாயி என்ற முறையில் நான் தெரிவிக்கின்றேன்.
உழைக்கும் வர்க்கத்தை மதிக்கும் அரசு அ.தி.மு.க. விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு முழுபணமும் சென்றடையும். விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது
23 Feb 2025ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க சென்ற ஐந்து படகையும் இலங்கையை கடற் படையினர் சிறை பிடித்து படகிலிருந்த 32 மீனவர
-
தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டனர்: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
23 Feb 2025துபாய்: தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
-
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர்
23 Feb 2025ஈரோடு: தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
5 நாட்கள் சுற்றுப்பயணம்: இந்திய ராணுவ தலைமை தளபதி பிரான்ஸ் தளபதியுடன் சந்திப்பு
23 Feb 2025புதுடெல்லி: இந்திய ராணுவ தலைமை தளபதி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அவர் பிரான்ஸ் தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் டெல்லி வருகை
23 Feb 2025புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் டெல்லி வந்தனர்.
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 14 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை
23 Feb 2025துபாய்: இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
-
இந்திய அணி அறிவிப்பு
23 Feb 2025இந்த சீசனுக்கான முதலாவது உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும், 2-வது உலகக்கோப்பை துப்பாக
-
இமாசலபிரதேசத்தில் நிலநடுக்கம்
23 Feb 2025சிம்லா: இமாசல பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
-
சென்னையில் நடந்த துணிகரம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகையை திருட முயன்ற காவலர்
23 Feb 2025சென்னை: சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-02-2025
24 Feb 2025 -
2024-ன் சிறந்த வீரர் உள்ளிட்ட 4 ஐ.சி.சி. விருதுகளை பெற்ற இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா
23 Feb 2025துபாய்: கடந்த 2024-ம் ஆண்டின் சிறந்த வீரர் உள்ளிட்ட 4 ஐ.சி.சி. விருதுகளை இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா பெற்றுக்கொண்டார்.
-
இந்திய அணியை வீழ்த்த வேண்டும்: பாக். கிரிக்கெட் வாரியத்தலைவர் பேச்சு
23 Feb 2025துபாய்: இந்திய அணியை பாகிஸ்தான் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியுள்ளார்.
-
இந்திய அணி அசத்தல் பந்துவீச்சு: 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாக்.
23 Feb 2025துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றிபெற 242 ரன்களை பாகிஸ்தான் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - பாக். மோதல்...
-
சூரியன்.ஜி இயக்கும் டெக்ஸ்டர்
24 Feb 2025ராம் எண்டர்டெயினர்ஸ் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், சூரியன்.ஜி இயக்கத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘டெக்ஸ்டர்’ (DEXTER).
-
நிறம் மாறும் உலகில் அம்மாவை பற்றிய படம்
24 Feb 2025சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் தயாராகி, மார்ச் 7 அன்று வெளியாகும் படம் 'நிறம் மாறும் உலகில். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட
-
கவுதமை பாராட்டிய ஆர்யா
24 Feb 2025லப்பர் பந்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிச்சர்ஸ் S.
-
ராமம் ராகவம் விமர்சனம்
24 Feb 2025நேர்மையான அரசு அதிகாரியான சமுத்திரக்கனியின் மகன் தனராஜ் கொரனானி, சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காமல் ஊர் சுற்றி ஊதாரியாக வளர்கிறான்.
-
ஹாலிவுட் தரத்தில் உருவாகும் சப்தம்
24 Feb 20257ஜி.சிவா, இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சப்தம்.
-
குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர்: இ.பி.எஸ்.
24 Feb 2025சென்னை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. தி.மு.க.
-
பா. விஜய் இயக்கத்தில் அகத்தியா
24 Feb 2025வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம் அகத்தியா. பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா.
-
அ.தி.மு.க.வின் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம் : ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
24 Feb 2025சென்னை : அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.
-
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
24 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையானது.
-
77-வது பிறந்த நாள் விழா: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2025சென்னை, 77-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.