எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி : விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்து அங்குள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 8.30 மணிக்கு வில்லிசேரி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பருத்தி விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்பவர்கள் விவசாயிகள். விவசாயத்திற்கு முதன்மையாக தேவைப்படுவது தண்ணீர். அதனை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இந்த பிரமாதமான திட்டத்திற்கு ஒட்டு மொத்த பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத ஏரி, குளங்களும், விவசாயிகள் பங்களிப்போடு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவாயிகளுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கிறது. அமெரிக்கன் படை புழு தாக்குதலில் இருந்து மக்காசோளம் பயிர்களை காக்க ரூ.45 கோடியில் அரசே பூச்சி கொல்லி மருந்தை தெளித்தது. புயல், வெள்ளம், வறட்சி என விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து அ.தி.மு.க. அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
பயிர் காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிக இழப்பீடு வழங்கியது தமிழக அரசுதான். கடந்த 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. இவ்வாறாக குழந்தைகளை போல கவனித்து விவசாயிகளுக்கு தேவையானதை அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது. நான் வெளிநாடு சென்று ஆய்வு செய்ததில் 65 லிட்டர் பால் கறக்கும் பசுக்களை பார்த்தேன். அது போல கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வாய் பேசுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்சி மையம் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்நடைகளை பாதுகாக்க அதிக அளவில் கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் ரூ. 4 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. கோவில்பட்டியில் 5 இடங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு காரணமாக ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு 443 ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவார்கள். அவர்களுக்கான அனைத்து படிப்பு செலவையும் அரசே செலுத்தும்.
ஸ்டாலின் பேசும் போது நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று படத்தில் கூறுவது போல எடப்பாடி பழனிசாமி நானும் விவசாயிதான், நானும் விவசாயிதான் என கூறுவதாக பேசி உள்ளார். மு.க.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுகிறார். விவசாயிகளின் மனம் புண்படும்படியாக ஸ்டாலின் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் சிந்தித்து பேச வேண்டும். இதனை விவசாயி என்ற முறையில் நான் தெரிவிக்கின்றேன்.
உழைக்கும் வர்க்கத்தை மதிக்கும் அரசு அ.தி.மு.க. விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு முழுபணமும் சென்றடையும். விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 days ago |
-
தமிழகத்தில் விஷக்காய்ச்சல்கள் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் அதிகரித்து வரும் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்தாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமலும் வேடிக்கை பார்ப்பதாக, தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்
-
நீர்வளத்துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
04 Oct 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரம
-
வீடு திரும்பினார் ரஜினி
04 Oct 2024சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்கள்
04 Oct 2024ஏமன் : பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபரின் வருமானம் இரு மடங்காக உயரும் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
04 Oct 2024புதுடெல்லி : வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும
-
தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை : அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
04 Oct 2024கோவை : தமிழகத்தில் எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
லெபனானுக்கு முழு ஆதரவு: கத்தார் அறிவிப்பால் பதற்றம்
04 Oct 2024தோகா : லெபனானுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கத்தார் அறிவித்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
-
சுரங்க மெட்ரோ ரயில் சேவை: மும்பையில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
04 Oct 2024மும்பை : மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 5) கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
-
காசாவின் மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
04 Oct 2024ரமல்லா : காசாவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
04 Oct 2024மும்பை : இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
-
கூகுளின் ஏ.ஐ. செயலி விரைவில் 8 இந்திய மொழிகளில் அறிமுகம் : கூகுள் நிறுவன இந்திய சி.இ.ஓ. தகவல்
04 Oct 2024புதுடில்லி : கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Oct 2024சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2024.
04 Oct 2024 -
கோவையில் ராணுவ தொழிற்பூங்கா: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
04 Oct 2024சென்னை : கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்
04 Oct 2024சென்னை : சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
04 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு வேலை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம் திடீர் சேதம்
04 Oct 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அங்கு கோவில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளது பக்தர்களை கவலை அடையச்ச
-
துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேச்சு: பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்
04 Oct 2024மதுரை : துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேசியது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் திடீர் ரத்து
04 Oct 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன.
-
4 முனை போட்டியில் வெல்லப்போவது யார்? - அரியானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : 90 தொகுதிகளில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளில் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மாநில அரசுகள் வழங்கும் உள் இடஒதுக்கீடு செல்லும் : மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி
04 Oct 2024புதுடெல்லி : எஸ்.சி., எஸ்.டி.
-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு பங்கு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
04 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்பது க
-
ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல: த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
04 Oct 2024சென்னை : ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்பதை புரியவைப்போம் என்று த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
-
தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.