எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகிறார். சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருவார். முதல்வராகும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது.
இதையடுத்து நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. தி.மு.க கூட்டணி மொத்தம் 158 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி மொத்தம் 76 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தன. அ.தி.மு.க. கூட்டணி 76 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அ.தி.மு.க. 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க 4 தொகுதிகளிலும், பா.ம.க 5 தொகுதிகளிலும் மற்ற கட்சி 1 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.
தி.மு.க மட்டும் மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று தமிழகத்தில் ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் அமைச்சராக, மேயராக பல பதவிகளை வகித்தார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த தே.மு.தி.க இந்த முறை கூட்டணியில் இருந்து விலகி அ.ம.மு.கவுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால் அந்தக் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டியிட்டார் ஆனால் அவரும் மண்ணை கவ்வினார். அ.தி.மு.க.வை எதிர்த்து சில தொகுதிகளில் களம் கண்ட அ.ம.மு.க.வும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை.கோவில்பட்டியில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனும் தோல்வியைத் தழுவினார். இந்தத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. விழுந்து விழுந்து பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் சீமான் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அவரும் தனது தொகுதியில் வெற்றி பெறவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்புவும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழகத்தில் பா.ஜ.க. நான்கு இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. இந்த நான்கு இடங்களில் தாமரை மலர்ந்துள்ளது. இது கொரோனா காலம் என்பதால் வெற்றி கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதனால் வேட்டுச்சத்தம் அதிகமாக கேட்கவில்லை. ஊர்வலமும் நடக்கவில்லை. அண்ணா அறிவாலயத்தில் மட்டும் தடையை மீறி சிலர் பட்டாசை வெடித்தனர். அவர்களை தடுக்க தவறிய ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. கருத்துக்கணிப்புகள் அந்தக் கட்சிக்கு சாதகமாக இருந்தன. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவர் கொளத்தூர் தொகுதியிலும் அவரது மகன் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தத் தேர்தலில் காங்கிரசும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. ராசியில்லாத கட்சி என்று சொல்லப்பட்ட ம.தி.மு.கவும் 4 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாதநிலையில் நடந்தது. இதன் காரணமாக பெரும் எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிலவியது. இறுதியில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப