எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் நீல் வாக்னர், இந்தியாவுக்கு எதிராக ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை இறுதி போட்டியை போன்றது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீல் வாக்னர் கூறுகையில் ‘‘இது எனக்கு உலகக்கோப்பை இறுதிப் போன்று போன்றது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை நான் ஒருநாள் அல்லது டி20 கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம். இனிமேல் ஒயிட் பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்று, முழு உத்வேகத்துடன் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம். டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. உலகின் பல்வேறு பகுதியில் விளையாடுவது எளிதானது அல்ல. மிகவும் சவாலானது. கடினமான சூழ்நிலையில் உங்களுடைய திறமை மற்றும் சிறந்த வீரருக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற முடியும்’’ என்றார்.
_______________
இதுதான் எங்கள் வழி - டீன் எல்கர்
தென்ஆப்பிரிக்காவிற்கான வழியில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டியது அவசியம் புதுக்கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘தற்போது நாங்கள் புது அத்தியாயம். நாங்கள் அதிகமான போட்டியில், சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். கடந்த காலகட்டத்தில் நாங்கள் மிகவும் சீராக இருக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். எங்களுடைய உச்சக்கட்ட திறமை இன்று வெளிப்படவில்லை. வழக்கமான கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகமான தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எங்களுடைய பாணியில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம்.
நாங்கள் எப்போதும் சிறந்த பேட்டிங் ஆர்டரை வைத்துள்ளோம். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களையும் வைத்துள்ளோம். இதுதான் தென்ஆப்பிரிக்கா வழி. மிகப்பெரிய சதம், ஐந்து விக்கெட் வீழ்த்தி, பழைய நிலைக்கு திரும்புவது அவசியம். கடந்த சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ, அதேபோல் மீண்டும் முன்னேற்ற அடைய முடியும் என்பதுபோல் உணர்கிறேன். இதுதான் என்னுடைய மிகப்பெரிய இலக்கு. இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.
______________
செல்சியா 2-வது முறை சாம்பியன்
2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தில் உள்ள செல்சியா, மான்செஸ்டர் சிட்டி அணிகள் தகுதி பெற்று இருந்தன. செல்சியா அணி ரியல் மாட்ரீட் அணியையும், மான்செஸ்டர் சிட்டி பி.எஸ். ஜி. அணியையும் தோற்கடித்து இருந்தன. செல்சியா-மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள போர்ட்டோ நகரில் நடந்தது.
இதில் செல்சியா 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு அந்த அணி வெற்றிபெற்று இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் செல்சியா 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்றது.
______________
சி.பி.எல்.லில் ஷாகிப் ஹசன் இல்லை
வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் தொடரை புறக்கணித்து விட்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினார். வங்காளதேச கிரிக்கெட் போர்டும் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் போட்டி நடைபெறுகிறது. ஜமைக்கா தல்லாவாஸ் அணி ஷாகிப் அல் ஹசனை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியா அணி வங்காளதேசம் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. மூன்று நட்சத்திர அணிகளுக்கு எதிராக வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் விரும்புகிறது. இதனால் ஷாகிப் அல் ஹசனுக்கு கரீபியர் பிரிமீயர் லீக்கில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
______________
இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன் 18 - 22) மோதுகின்றன. இதையொட்டி மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் வருகிற 2-ம் தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு மறுநாள் இங்கிலாந்தை அடைகிறார்கள். வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.
அங்கு சென்றதும் இந்திய வீரர்கள் நேரடியாக சவுத்தம்டன் மைதான பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்துலை தொடங்குவார்கள். தனிமைப்படுத்தலின் போதும் முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிமைகாலம் எத்தனை நாட்கள் என்ற விவரத்தை ஐ.சி.சி. குறிப்பிடவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.