எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பிளஸ் - 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்க இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்துக்காக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தன. தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டன. 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது தொடர்பான நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி கல்வித்துறை உயர் அதிகாரிகள், நிபுணர் குழுவினர், மனநல மருத்துவர்கள் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர். இதைதொடர்ந்து தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கொரோனா 3-வது அலை வர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால், அது பாதிப்பை அதிகரிக்க செய்து விடும் என்று நிபுணர் குழுவினர் எச்சரித்திருந்தனர். மேலும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்தே தமிழக அரசு பிளஸ்-2 தேர்வை ரத்து செய்துள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
பிளஸ்-2 மாணவர்கள் அடுத்து உயர் படிப்புகளில் சேர்வதற்கு வசதியாக விரைவில் மதிப்பெண் பட்டியல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தேர்வு நடைபெறாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது மிகப்பெரிய சவாலான ஒன்றாக உள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் போது எதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இவற்றை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.
அந்த குழுவில் உயர் கல்வித்துறைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 முதல் 10 பேர் கொண்ட குழுவாக இது அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவை தேர்வு செய்வதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மிகச்சிறந்த கல்வியாளர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அது போல மாணவர்கள் நலனில் மிகச்சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயர்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த பட்டியலின் அடிப்படையில் யார்- யாரை எல்லாம் குழுவில் சேர்ப்பது என்பது முடிவு செய்யப்படும். அதன் பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படும். இந்த குழு தொடர்பான தகவல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு அமைக்கப்பட்டதும் அவர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை ஆய்வு செய்வார்கள்.
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும். மற்ற மாநிலங்களில் பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்படும். மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் மாணவர்களின் முந்தைய தகுதி நிலவரங்களும் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கலாமா என்பதும் ஆய்வு செய்யப்படும்.
இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதும் அவை தொகுக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசிரியர் குழுவினர் சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படுகிறது என்ற முழு விவரமும் தெரியவரும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை முடிவு செய்யும் போது அவர்கள் 11-ம் வகுப்பில் எந்த அளவுக்கு மதிப்பெண்களை எடுத்து இருந்தனர் என்பதையும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் எப்படி தகுதி பெற்று இருந்தனர் என்பதும் ஆய்வு செய்யப்படும்.
10-ம் வகுப்பு தேர்வின் போது பெற்ற மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிளஸ்-2 மாணவர்கள் பெறும் மதிப்பெண்தான் அவர்களது எதிர்காலத்துக்கான உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் இதில் கவனமுடன் செயல்பட தமிழக அரசு தீவிரமாக உள்ளது. எனவே பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்தவித குறையும் இல்லாமல் அவர்களது தகுதிக்கு ஏற்ப உரிய மதிப்பெண்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 days ago |
-
அகத்தியா விமர்சனம்
03 Mar 2025கலை இயக்குநராக இருக்கும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்ஆக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கி
-
சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2025xநாகை, சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-03-2025.
03 Mar 2025 -
சுழல் 2 விமர்சனம்
03 Mar 2025சமூக ஆர்வலர் லால் தனது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறார்.
-
நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பும் இல்லை, தேவையும் இல்லை: சீமான் திட்டவட்டம்
03 Mar 2025மதுரை : நடிகையுடன் உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
-
கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
03 Mar 2025நாகப்பட்டினம், இதுவரை 3,656 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது என்றும் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், த
-
எதிரியாக அல்ல உதிரியாகத்தான் பார்க்கிறோம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
03 Mar 2025சென்னை : நாங்கள் எடப்பாடி பழனிசாமியை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாகத்தான் பார்க்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நேரடியாக தலையிட பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்க வேண்டுகோள்
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நீங்கள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மீனவர்கள் விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கவர்னர் ரவி மீது செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் பிரச்னையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து தமிழக காங
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
03 Mar 2025புது டெல்லி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்
-
ரூ 100 கோடியில் நாகையில் மீன்பிடித்துறைமுகம். புதிய பேருந்து நிலையம்: முதல்வர் புதிய அறிவிப்பு
03 Mar 2025நாகை : நாகப்பட்டினத்தில் 100 ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடித்துறைமுகமும் பேருந்துநிலையமும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை
03 Mar 2025லாஸ் ஏஞ்சல் : அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
-
கூரன் விமர்சனம்
03 Mar 2025கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் செல்லும் நாய்க்குட்டி கார் மோதி இறந்து விடுகிறது.
-
முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு
03 Mar 2025கூடலூர், முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு நடத்தவுள்ளது.
-
தலைஞாயிறில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை: நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
03 Mar 2025நாகை, தலைஞாயிறு பகுதியில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை உள்ளிட்ட நாகை மாவட்டத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பான வழக்குகள் ஒத்திவைப்பு
03 Mar 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வழக்கு தொடர்ந்த அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் எண் கொண்ட அட்டைகள் போலியாே? - தலைமை தோ்தல் ஆணையம் விளக்கம்
03 Mar 2025புதுடில்லி : வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை அதிகாரிகள் மாற்றம்
03 Mar 2025சென்னை : அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்
03 Mar 2025கீவ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு
-
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுகிறது : அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு
03 Mar 2025புதுடில்லி : தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
-
ஆஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்
03 Mar 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
-
மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் +2 தோ்வு தொடக்கம்: 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் பங்கேற்பு
03 Mar 2025சென்னை, தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமைதொடங்கியது.
-
பேரன் துஷ்யந் வாங்கிய கடனுக்காக சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Mar 2025சென்னை, திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத
-
நாகையில் 39 ஆயிரம் பேருக்கு ரூ.200 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் : 105 புதிய பஸ்களின் சேவையையும் தொடங்கி வைத்தார்
03 Mar 2025சென்னை : நாகையில் 39 ஆயிரம் பேருக்கு ரூ.200 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் 105 புதிய பஸ்களின் சேவையையும் தொடங்கி வைத்தார்.
-
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
03 Mar 2025சென்னை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.