எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.28 - ரேஷன் கடைகளை கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், பொங்கல் பண்டிகைக்கு வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தரமான பச்சரிசி வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கூறினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் முதலான அத்தியாவசியப் பொருட்கள் பொது விநியோகத் திட்டக் கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படுவதையும், குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து பொருட்களையும் பெறுவதை உறுதி செய்திடும், ஆய்வுக்கூட்டம், நேற்று காலை 11 மணி அளவில் (27.12.2012) தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான புழுங்கல் அரிசி, பச்சரிசி வழங்கவும் சர்க்கரை,கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில் ஆகியன மானியவிலையில் தமிழ்நாட்டிலுள்ள 33,474 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாய விலை அங்காடிகள் மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அங்காடிகளிலும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஜனவரி 2013-க்கான மாதாந்திர ஒதுக்கீட்டின்படி அனைத்து பொது விநியோக திட்ட கிடங்குகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் 5.1.2013-க்குள் நகர்வு செய்து போதுமான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டுமென்று உணவுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதன்படி 1.1.2013 முதல் மாத இறுதி வரை அனைத்து அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்ஆணையின்படி ஆந்திரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தரமான பச்சரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லாமல் வழங்கப்படும் . மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான துவரம்பருப்பு உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியனவும் மானியவிலையில் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி கொள்முதல் செய்யப்படும் 21 ஆயிரத்து 700 மெ. டன் பாமாயில் சென்னை துறைமுகத்திற்கு மூன்று கப்பல்கள் மூலமும் துத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு கப்பல் மூலம் 8,000 மெ.டன் பாமாயிலும் கொண்டுவரப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை 1.1.2013 முதல் 31.12.2013 வரை செல்லத்தக்கதாக மேலும் ஓராண்டிற்கு nullநீட்டிக்கப்பட்டு, ஜனவரி2013 மற்றும் பிப்ரவரி 2013 மாதங்களில் அங்காடிகளில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெற உள்ளது. இதன்படி குடும்பத் தலைவர் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் குடும்ப அட்டையை நியாயவிலைக் கடைகளுக்கு எடுத்துச்சென்று, 2013ஆம் ஆண்டிற்கான உள்தாளை இணைத்து பெற்றுக்கொண்டு நியாயவிலைக் கடைகளில் பராமரிக்கப்படும் வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின்படி குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி இப்புதுப்பித்தல் பணியை நிறைவேற்றிக் கொண்டிடும் வகையிலும், கூட்ட நெறிசலை தவிர்க்கும் பொருட்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க நியாயவிலைக் கடைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி முறையில் தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பிக்க, தவிர்க்க முடியாத காரணங்களால் அங்காடிக்கு வரஇயலாதவர்கள் அந்த வாரத்தில் சனிக்கிழமை கடைக்கு வந்து அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மாதாந்திர ஒதுக்கீடான 52,806 கி.லி மண்ணெண்ணெய்யை ஜுன்2011ல் 44,580 கி.லி. எனக்குறைத்து தற்போது கடந்த 9 மாதங்களாக டிசம்பர் 39,429 கி.லி.எனக்குறைத்து , ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டின், மண்ணெண்ணெய் தேவையான 65,140 கி.லி. முழுவதையும் வழங்க, பாரதபிரதமரை நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் மத்தியஅரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டினை சிறிதளவும் உயர்த்தி தரவில்லை. இருப்பினும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மண்ணெண்ணெய் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுவிநியோகத்திட்ட கிடங்குகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இருப்பு வைத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஒதுக்கீட்டின்படி அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படுவதை உறுதி செய்திடவும், அங்காடிகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைத்தல், பொருள்களின் தரம் குறித்த புகார்கள், அங்காடிகளில் தரமற்ற பொருட்கள் காணப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பி தரமான பொருள்களை பெறுதல் ஆகிய பணிகளை கண்காணிக்கும் பொருட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் உணவுத்துறை செயலாளர் நிர்மலா, குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பஷீர் அஹமது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளர் ஏ.கலையரசி உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.