எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.30 - காவிரிப் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நீலிக்கண்ணீர் வடிக்கிறார், கபட நாடகமாடுகிறார். உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி, உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-ல் வெளி வந்த பிறகு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, 2011 வரை இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தற்போது கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும்; தமிழகம் வடிக்கும் கண்ணீரும்! என்ற தலைப்பில் nullநீலிக்கண்ணீர் வடித்து கடித வடிவிலே அறிக்கை வெளியிட்டிருப்பதைப் பார்க்கும் போது, உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம் என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
கருணாநிதி தனது அறிக்கையில், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளி வந்த போது, இது தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் அறிக்கை வெளியிட்டதாகவும், அந்த இறுதித் தீர்ப்பைத் தான் அரசிதழிலே வெளியிட வேண்டும் என்று தற்போது பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்த உண்மை நிலைமையை நான் எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், காவேரி நடுவர் மன்றத்தில் தமிழகத்திற்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீnullக்கறவு செய்து சாதகமான தீர்ப்பினை பெறுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் நலன் கருதி மேற்படி நதிநீnullர் பங்கீடு தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசு மத்திய அரசிதழில் வெளி வரச் செய்து, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை எவ்வித காலதாமதமும் இன்றி நடைமுறைப்படுத்த மனப்nullர்வமான, ஆக்கப்nullர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல், 15.4.2007 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மீது உச்ச நீnullதிமன்றம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதும் அ.தி.மு.க. தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், தி.மு.க. சார்பில் நடுவர் மன்றத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உச்ச nullநீதிமன்றம் செல்லலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு அ.தி.மு.க. சார்பில் உடன்பாடு இல்லை என்று எடுத்துரைக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு விட்டால், உச்ச nullநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று ஒரு வாதத்தை வைத்தவரும் கருணாநிதி தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அ.தி.மு.க. கருத்தினை முற்றிலும் புறக்கணித்து, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சார்பில் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, 10.7.2007 அன்று காவேரி நடுவர் நீnullதிமன்றம் தமிழக அரசின் மனுவினை விசாரிக்க முடியாது என தெளிவாக தெரிவித்து கருணாநிதியின் முகத்தில் கரியை nullசியது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் தெரிவித்தது போலவும், அந்தத் தீர்ப்பையே இன்று மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதுவது போலவும் உண்மையைத் திரித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தனது அறிக்கையின் ஆரம்பத்தில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று 20.12.2012 மற்றும் 22.12.2012 ஆகிய தேதிகளில் நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு முன்னரே, அதாவது 17.12.2012 அன்றே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழிலே வெளியிடச் செய்ய பாரதப் பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான் கேட்டுக் கொண்டதாகவும்; அதன்படி அவர்களும் பாரதப் பிரதமரைச் சந்தித்து முறையிட்டதாகவும்; பாரதப் பிரதமரும் உரிய முறையில் பரிசீலித்து ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.
அ.தி.முக. பொறுத்த வரை, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ல் வெளி வந்ததிலிருந்து, தமிழகத்திற்கு பாதகமாக உள்ளவற்றை உச்ச nullநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்; இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்; காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், 14.6.2011 அன்று பாரதப் பிரதமரை டெல்லியில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன். இது மட்டுமல்லாமல் 17.10.2011 அன்று இது குறித்த ஓர் கடிதத்தை பாரதப் பிரதமருக்கு அனுப்பினேன். மத்திய நீnullர் வள அமைச்சகத்தை இது குறித்து கவனிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்ற நான்கு வரி பதில் மட்டுமே பாரதப் பிரதமரிடம் இருந்து வந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு நியாயம் கிடைக்காது என்பதால், இது குறித்து உச்ச nullநீதிமன்றத்தில் 17.4.2012 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இத்தருணத்தில், காவேரி நதிநீnullரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பான வழக்கு உச்ச நீnullதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்போது மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்ற வினாவினை எழுப்பி, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீnullதிமன்றம் 5.12.2012 அன்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து 7.12.2012 அன்று நடைபெற்ற காவேரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் என்றும் காவேரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் மத்திய nullநீர் வள அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளை உச்ச nullநீதிமன்றம் தனது 10.12.2012 நாளைய ஆணையில் பதிவு செய்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு காலம் தாழ்த்துவதால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 20.12.2012 மற்றும் 22.12.2012 தேதியிட்ட கடிதங்கள் மூலம் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதையும், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும் விரைவுபடுத்துமாறு பாரதப் பிரதமருக்கு நான் மீண்டும் கடிதங்கள் எழுதினேன். 27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.
இதற்கிடையில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டால், அ.தி.மு.க. நற்பெயர் ஏற்பட்டு விடுமே என்று அஞ்சி, தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பாரதப் பிரதமரை சந்திக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் அவர்களும் பாரதப் பிரதமரை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உண்மையிலேயே வலியுறுத்தினார்களா? அல்லது கேட்பது போல் ஒரு கபட நாடகமாடி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டனரா என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில், தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையிலேயே காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தால் அந்த கோரிக்கை எழுத்துப்nullர்வமானதாக இருந்திருக்க வேண்டும். உண்மையிலேயே எழுத்துப்nullர்வமாக இந்தக் கோரிக்கையை வைத்திருந்தால் அதனை ஊடகங்களுக்கு கருணாநிதி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை வெளியிடவில்லை. இதிலிருந்து, எழுத்துப்nullர்வமாக எந்த ஒரு கோரிக்கை மனுவினையும் கருணாநிதி, தி.மு.க. சார்பில் வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த போது இது குறித்து பாரதப் பிரதமரை சந்திக்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தாத கருணாநிதி, தற்போது பாரதப் பிரதமரை சந்திக்க வலியுறுத்தி அதன் பேரில் அவர்கள் சந்தித்து இருப்பதும்; அதே பிரச்சனை குறித்து அ.தி.மு.க. சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு பல நாட்களாகியும் இது நாள் வரையில் நேரம் ஒதுக்கப்படாததை பார்க்கும் போதும்; 27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், இது வரை பின்பற்றாத நடைமுறையாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 10 நிமிடங்கள் தான் பேச வேண்டும் என்றும், இந்த பத்து நிமிடங்களை, விளையாட்டுப் போட்டிகளில் காண்பிக்கப்படுவது போல் இறங்குமுகத்தில் பெரிய திரையில் திரையிட்டு காண்பித்து, 5 நிமிடங்கள் பேசி முடித்த பிறகு ஒரு சிறிய மணி அடிக்கப்படும் என்றும், எட்டு நிமிடங்கள் பேசி முடித்த பிறகு ஆரஞ்சு விளக்கு எரியும் என்றும், பத்து நிமிடங்கள் முடிந்த பிறகு சிகப்பு விளக்கு எரியும் என்றும், பின்னர் மணி அடிக்கப்படும் என்றும் பல நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளதைப் பார்க்கும் போதும்; எதற்கெடுத்தாலும் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதுவதையும், அறிக்கை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள கருணாநிதி இந்த விஷயத்தில் எந்தக் கடிதமும் எழுதாமல் வாய்மூடி மவுனியாக இருந்துள்ளதைப் பார்க்கும் போதும்; காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரை சந்தித்து வாய்மொழியாக வலியுறுத்தி சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.
எது எப்படியோ, உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துவதோடு, இந்த விஷயத்தில் கருணாநிதி வாய் திறக்காமல் இருந்தாலே அது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்ச nullநீதிமன்றம் முன்பு அளித்த வாக்குறுதியை மனதில் கொண்டு, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடவும், காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.