எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில், ஏப்ரல் 20 - சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது மனதை பாதித்தது. சமீபத்தில் இண்டர்நெட்டில் இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது. இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்தார். பின்னர் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊரான சீகம்பட்டிக்கு வந்துவிட்டார். அங்கு வந்தும் தனது நண்பர்களிடம் இலங்கை தமிழர்களை அநியாயமாக கொன்று விட்டார்களே என்று கூறி அழுது புலம்பினார்.
நேற்று முன்தினம் காலை கிருஷ்ணமூர்த்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற முயன்றனர். ஆனால் அவரால் பேச முடியவில்லை. நேற்றுமுன்தினம் மாலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உடனடியாக கிருஷ்ணமூர்த்தியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இரவே தகனம் செய்யப்பட்டது.
நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதனை அவரது பெற்றோர் பார்த்தபோது அந்த கடிதத்தை கிருஷ்ணமூர்த்தியே எழுதியிருந்தது தெரியவந்தது. இதில் இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தார்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு தெரிவித்தனர். உடனடியாக அவர் நேற்று காலை சீகம்பட்டிக்கு விரைந்தார். அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது,
நெல்லை மாவட்டம் குருவிகுளம் அடுத்த சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த என்ஜினியர் கிருஷ்ணமூர்த்தி, இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது. ஆனால் போலீசார் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்ததை மறைத்து, அவரால் பேச முடியவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து உயிருக்கு போராடிய போது அவரது தாயார் சுப்புலட்சுமி அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துள்ளது மிகப்பெரிய தியாகம்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை தலைவர் பான்கீமூன் நேரில் சென்று விசாரிக்க இலங்கை அரசு அனுமதிக்க வில்லை. மேலும் ஐ.நா. சபையை இலங்கை படுகொலை குறித்து விசாரணை நடத்தி இது போர் குற்றம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர் நடக்கும் போது சர்வதேச விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதி போரில் விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. சபையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவாக நடந்து கொண்டுள்ளது.
சர்வதேச குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு இந்தியா உதவுவது தலைகுனிவாக உள்ளது. இலங்கையுடனான உறவை இந்தியா முறித்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் தமிழர் படுகொலையில் இலங்கைக்கு ஆதரவு என்ற நிலையாவது கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழர் படுகொலைக்கு இந்தியா ஆதரவு என்ற நிலை ஏற்பட்டு விடும்.
சமீபத்தில் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதனால் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கொன்று கடலில் வீசியுள்ளனர். பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். அப்போது அங்குள்ள பொதுமக்களும், மீனவர்களும் ம.தி.மு.க.வின் உன்னத நிலையை பாராட்டினர். நான் தேர்தலில் ஏன் போட்டியிட வில்லை என்று யாரும் கேட்க வில்லை. இதன் மூலம் அரசியல் பொது வாழ்க்கையில் எங்களுக்கே வெற்றி. இவ்வாறு வைகோ பேசினார்.
தற்கொலை செய்த கிருஷ்ணமூர்த்தி எழுதிய உருக்கமான கடிதம்
இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தின் விபரம் வருமாறு,
அன்று ராமன் - ராவணன்
இன்று ராமன் - ராஜபக்சே
அன்று ராவணன் செய்த கொடூரமான செயலை இன்று சிங்களர்கள் செய்து விட்டனர். அவர்களுக்கும், இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பார்த்திருக்க வேண்டும்.
இலங்கையில் சிங்களர்களின் இனவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்று தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான தனிநாடு ஒன்று ஒரு சிறப்பை பெற்று தர வேண்டும். அது வரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்க கூடாது. அப்படி பொறுப்பேற்றால் தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லி கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள்.
இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன். அப்பா, அம்மா, சீனி, தினகர் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இப்பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இது தான். இதை நான் செய்யாவிட்டால் மிகப்பெரிய குற்றவாளி நான் தான். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.