எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தனது மகள் கனிமொழி சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைக்கவே மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாக நாடகமாடியுள்ளார் கருணாநிதி என்று முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.
தென் சென்னை மாவட்டம் மயிலை, 144 வது வட்டம் சார்பில் ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, தி.மு.க. வின் அராஜகப் போக்கு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. மயிலை பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான முத்துமணி, தென் சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.ஆர். வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது,
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை ஏற்படுத்தி ஊழலுக்கு காரணமான தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடைபெற்று அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரோடு அவரது முன்னாள் துறை செயலாளர் மற்றும் சிறப்பு செயலாளர் ஆகிய இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் ராசாவை காட்டிலும் உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் 4 வது நபராக இந்த விவகாரத்தில் ராசா காட்டிய சலுகையால் பெரும் பலனடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாகி ஷாகித் பல்வா, கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே எந்த நேரமும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்படலாம் என பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
மீனவர்கள் பிரச்சினையில் தி.மு.க. தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கருணாநிதி அவசர அவசரமாக ஒரு போராட்ட அறிவிப்பை அறிவித்து சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டது எல்லாம் ஸ்பெக்ட்ரம் விசாரணையின் எதிரொலியாக சி.பி.ஐ. எந்த நேரமும் விசாரணைக்கு அழைக்கலாம் என்று கருதியதே காரணம். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்கள் மத்தியில் திசை திருப்பவே உள்நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
மீனவர்களுக்காக தி.மு.க. நடத்தும் இந்த நீலிக்கண்ணீர் நாடக போராட்டம் மக்களிடையே எடுபடாது. கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை போராட்டக்காரர்கள் என்று சமீபத்தில் கருணாநிதி வர்ணித்ததை மீனவ சமுதாயம் அவ்வளவு எளிதில் மறக்காது. கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்த போது அவரை மீனவ சமுதாயமும், தமிழ்நாட்டு மக்களும் எப்படி மன்னிக்க முடியும். இந்த துரோகத்தால் தானே கச்சத்தீவு அருகில் நமது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தானே 540 மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்தோடு மீனவர்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சிங்கள படை பறிமுதல் செய்தும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளது என்பதை கருணாநிதியால் மறுக்க முடியுமா?
மீனவர்கள் மீது இலங்கை இனிமேல் தாக்குதல் நடத்தாது என்று மத்திய அரசும், கருணாநிதியும் கூறிய உறுதிமொழிகள் என்னவாயிற்று? காற்றில் பறந்து விட்டதா? மீனவர்களின் அவலம் தீர கருணாநிதி ஏதாவது ஒரு உருப்படியான காரியத்தை செய்தது உண்டா? நிராயுதபாணியாக செல்லும் நமது மீனவர்களை சிங்கள கப்பல் ரோந்து படையினரின் தாக்குதலில் இருந்து தம் உயிர் காக்க தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவாரா?
கச்சத்தீவை திரும்பப் பெறுவதுதான் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு என்று பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிய கருத்தை கருணாநிதி ஏற்கிறாரா? இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து ஜெயலலிதா தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் கருணாநிதி மற்றும் மத்திய அரசின் பதில் என்ன? மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஜெயலலிதாவின் தலைமையில் அமைப்பது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.