எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.6 - தமிழ்நாட்டில் 5 கட்டங்களாக நடக்க உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் முதல் நிலையில் உள்ள சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முதல் நிலையில் உள்ள 22 ஆயிரத்து 192 சங்கங்களுக்கான 4 கட்டத்தேர்தல்களுக்கான முறையான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர 14 செயற்பதிவாளர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர செயற்பதிவாளர்களான பால் வளத்துறை ஆணையர், கைத்தறித்துறை இயக்குநர், மீன் வளத்துறை ஆணையர், தொழில் வணிகத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர், சர்க்கரைத்துறை இயக்குநர், பதிவாளர் (வீட்டு வசதி) சமூக நலத்துறை இயக்குநர், கதர் கிராமத் தொழில்துறை ஆணையர், வேளாண்துறை இயக்குநர் ஆகிய 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 22532 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தமிழக அரசு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஒன்றை அமைத்தது. இதன் ஆணையராக ம.ரா.மோகன் பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தல் ஆணையம்தான் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களை தற்போது நடத்த உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த தனியாக மாநில தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதைப் போல கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்த கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இரண்டாம் நிலையில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயல்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மூன்றாம் நிலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை தவிர) இதர தலைமை கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. நான்காம் நிலையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஐந்தாம் நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
முதல் நிலையில் தேர்தல் நடத்தப்படவுள்ள 22192 சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதல் கட்டத்தில் 5855 சங்கங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 5603 சங்கங்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 5481 சங்கங்களுக்கும், நான்காம் கட்டத்தில் 5253 சங்கங்களுக்கும் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் 5.4.2013 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் 12.4.2013 அன்றும், மூன்றாம் கட்ட தேர்தல் 19.4.2013 அன்றும், நான்காம் கட்ட தேர்தல் 27.4.2013 அன்றும் நடைபெறவுள்ளது.
தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பதற்கும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார். தற்போது கூட்டுறவு தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட உள்ளனர். என்றும் அவர் கூறியுள்ளார். முதல் நிலைக்கான தேர்தல் நடைமுறைகள் 4.3.2013 தேதி தொடங்கி முடிகிறது.
முதல் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் 4 கட்டங்களாக நடக்க உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
முதல் நிலையில் உள்ள 4 கட்டத் தேர்தல்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் நேற்று முன்தினம் (மார்ச 4 -ம் தேதி ) அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நிலையில் உள்ள 4 கட்ட தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
முதல் நிலைத் தேர்தல்களில் சம்பந்தப்பட்டத் தேர்தல் அதிகாரியால் வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் மற்றும் 2 -வது கட்ட தேர்தல்களுக்கு மார்ச் 22 -ம் தேதியும், மூன்றாம் கட்டத்திற்கு ஏப்.1 -ம் தேதியும், நான்காம் கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும் வெளியிடப்படவுள்ளது.
முதல் நிலைக்கூட்டுறவு உறுப்பினர்களின் பட்டியலை சங்கம் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்டத் தேர்தல் அதிகாரியே முதல், 2 -வது கட்டங்களுக்கு மார்ச் 22 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.1-ம் தேதியும் 4 வது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும் உறுப்பினர் பட்டியலை வெளியிடுவார்.
முதல் நிலைக் கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கும் 4 கட்டங்களிலும் வாக்காளர் பட்டியில் உள்ள குறைகள் முதல் கட்டத்திற்கு மார்ச் 25 -ம் தேதியும், இரண்டாம் கட்டத்திற்கு 26 -ம் தேதியும், மூன்றாவது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும், 4 -வது கட்டத்திற்கு ஏப் 6 -ந் தேதியும் தெரிவிக்க வேண்டும்.
குறைகள் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முதல் கட்டத்திற்கு இம்மாதம் 26 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு 29 -ம் தேதியும், 3 -வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 4 -வது கட்டத்திற்கு ஏப் 9 -ம் தேதியும் முடிவு எடுப்பார்.
இறுதி வாக்காளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 27 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு ஏப்.1 -ம் தேதியும், 3 -வது கட்டத்திற்கு ஏப்.6 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.12 -ம் தேதியும் வெளியிடப்படும். வேட்புமனுக்கள் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 27 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.1.ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப். 9 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.15.ம் தேதியும், காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம்.
வேட்பாளரின் மனுக்கள் பரிசீலனை முதல் கட்டத்திற்கு இம்மாதம் 29 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப். 4 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.9 ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப் 15 -ம் தேதியும் மாலை 4 மணியிலிருந்து 5.30 மணி வரை நடக்க உள்ளது.
வேட்பாளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 29 -ம் தேதியும் 2 வது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப். 9 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப். 15 -ந் தேதியும் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது முதல் கட்டத்திற்கு இம்மாதம் 30 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.10 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும் 4 மணிக்குள் நடைபெறும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு 30 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.10 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.16 -ந் தேதியும், மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு தேவையானால் முதல் கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.12 -ம் தேதியும், 3வது கட்டத்திற்கு ஏப்.19 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.27 -ம் தேதியும் நடக்கும்.
வாக்கு எண்ணிக்கை முதல் கட்டத்திற்கு ஏப்.9 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.23 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.30 -ந் தேதியும் நடக்கும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே அறிவிக்கப்படும்.
சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் முதல் கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும, 2 வது கட்டத்திற்கு ஏப்.23 -ம் தேதியும், 3வது கட்டத்திற்கு ஏப்.30 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு மே.6 -ம் தேதியும் நடக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.