எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.19 - இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மீது போர்க் குற்ற பொது விசாரணை நடத்த வேண்டும், மனித உரிமையை மீறிய ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், ஐ.நா. சபையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மேலும் வலுவாக்கி அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ்ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் நேற்று முதல் தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம், சாலை மறியல் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நேற்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ்ஈடுபட்டதால் அனைத்து கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டது என்றாலும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மத்திய அரசும் மாணவர்கள் போராட்டத்தால் தனது முடிவை பரிசீலிக்கும் நிலையில் உள்ளது. ஈழத் தமிழர்களின் தன்னிலைக்கான மாணவர்கள் முன்னணி அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்கு பூட்டு போட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவி திவ்யா மாணவர்களை ஒருங்கிணைத்திருந்தார். மாணவி திவ்யா தலைமையிலான இந்த குழுவில் அனைத்து கல்லூரிகளும் ஒன்று சேர்ந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
மாணவர்கள் முற்றுகை போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மாணவர்கள் கவர்னர் மாளிகைக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஈழப்படுகொலை காட்சிகள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் பிடித்திருந்தனர்.
9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் சுமார் 2 1ற2 மணி நேரம் நீடித்தது. சாலை ஓரமாக நடுரோட்டில் அமர்ந்த மாணவர்களிடம் அடையாறு துணை கமிஷனர் சுதாகர் 2 முறை சென்று போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் இன்னும் மாணவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். உடனடியாக போராட்டத்தை நிறுத்த முடியாது என்று கூறினர்.
பின்னர் 11.30 மணி அளவில் மாணவர்கள் அனைவரும் ஆவேசமாக கோஷம் எழுப்பியபடியே கவர்னர் மாளிகையை நோக்கி ஓடினர். இந்த போராட்டம் காரணமாக சைதாப்பேட்டை கோர்ட்டில் இருந்து கவர்னர் மாளிகை வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு போலீசார் தடுப்பு வேலிகளை சாலையில் அமைத்திருந்தனர். அவற்றை தள்ளிவிட்டு விட்டு கவர்னர் மாளிகையை நோக்கி முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் ஓடினர். அவர்களை நூற்றுக்கணக்கான போலீசார் அரணாக நின்று தடுத்தனர்.
அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களின் கூட்டத்தை கயிறு கட்டி போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதைத்தொடர்ந்து தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர்கள் சரவணன், சுதாகர் ஆகியோர் அங்கு நேராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 அரசு பஸ்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் மாணவர்கள் 500 பேரையும் கைது செய்து ஏற்றினர்.
முன்னதாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பஸ் ஏறுவதற்காக அங்கு வந்தார். அவரும் மாணவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ராஜபக்சேவின் உருவப்படத்தை கிழித்து எறிந்து ஆவேசத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த போராட்டத்தின் போது அந்த பகுதியில் போக்குவரத்து எப்போதும் போலவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையே சைதாப்பேட்டை கோர்ட்டு வாசலிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த தடுப்பு அகற்றப்பட்டது. மாணவர் போராட்டத்துக்கு கோர்ட்டில் இருந்த வக்கீல்கள் சிலரும் வெளியில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
ஆந்திர சட்டக்கல்லூரியில் பயிலும் 30 தமிழ் மாணவர்களும் அங்கிருந்து வந்து இந்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று ராஜபக்சே பேனரை செருப்பால் அடித்து எரிக்க முயன்றனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் அவர்களை தடுத்து நிறுத்தினார்.இந்த போராட்டத்துக்கு சித்த மருத்துவ ஆராய்ச்சி மாணவர் டாக்டர் வீரபாகு தலைமை தாங்கினார்
ராமாபுரத்தில் 3 ஆயிரம் மாணவர்கள் சாலை மறியல்:
சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 ஆயிரம் பேர் ்ஈழத்தமிழர் பிரச்சினைக்காக நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ்டுபட்டனர்.
கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டு திடீர் போராட்டத்தில் ்டுபட்டனர். அவர்கள் 100 பேரை போலீசார் அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டு விட்டு வந்தனர். ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எப். நிறுவனத்தின் மைதானத்தில் வேல்டெக் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சுமார் 300 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராஜபக்சேவை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அவர்கள் ஈழப் பிரச்சினையில் இறுதி முடிவு கிடைக்கும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர்.
துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்களும் மறியல் போராட்டத்தில் ்டுபட்டனர். பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோல சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் இருந்து சுங்கத்துறை தலைமை அலுவலக கட்டடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். ஒருகட்டத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி பலர் தடுப்பு வேலியை கடக்க முயன்றனர். பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி கடற்கரை சாலையிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு பேருந்துகள் வேற்றுப் பாதையில் விடப்பட்டன.
நாளை (20-ந்தேதி) தமிழகம் முழுவதும் ஒரு கோடி மாணவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், முழக்கங்களை எழுப்ப உள்ளனர்.
லயோலா கல்லூரி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் தீர்மானத்தை புதைக்கின்ற இறுதி சடங்கு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் போராட்டம் எழுச்சி அடைந்திருப்பதால் கட்டாயம் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் வெற்றி கிடைக்கும் என்று போராட்ட மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார