முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அஞ்சலி மீது களஞ்சியம் வழக்கு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 சென்னை, ஏப்.13 - நடிகை அஞ்சலி மீது திரைப்பட இயக்குனர் களஞ்சியம் சென்னை சைதாப்பேட்டை  கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நடிகை அஞ்சலி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரை முதலில் சத்தமின்றி முத்தமிடு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தேன். பொருளாதார சிக்கல் காரணமாக அந்த படம் வெளிவரவில்லை.

அதன் பிறகு பல்வேறு படங்களில் அவர் நடித்திருக்கிறார். முதல் படத்தில் அறிமுகப்படுத்தியவன் என்ற முறையில் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் நட்பு ரீதியில் பழகினேன்.  அவர்களுக்கு தமிழகத்தில் அறிமுகம் இல்லாத காரணத்தினால் அவ்வப்போது அஞ்சலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆலோசனைகளையும், அறிவுரை களையும் வழங்குவேன். ஆனால் சொந்த விவகாரத்தில் தலையிடுவது கிடையாது.

அண்மையில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த அஞ்சலி, அவரது சொத்துக்களை நான் பறிக்க முயன்றதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார்.  திரைப்படத்துறையில் எனக்கென நல்ல பெயர் உள்ளது.

மேலும் தமிழர் நல பேரியக்கம் என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறேன். அந்த நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன், பொய்யான, அவதூறு குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்தியிருக்கிறார். எனவே அவரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்