எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஏப். - 30 - சார்லஸ்-டயானா தம்பதிகளின் மகனான பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமிற்கும் அவரது 10 ஆண்டுகால காதலி கேதரின் மிடில்டனுக்கும் நேற்று லண்டனில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. லண்டனில், வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள தேவாலயத்தில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். திருமணத்தைக்காண சுமார் 10 லட்சம் பேர் குவிந்ததால் லண்டன் மாநகரமே குலுங்கிப்போனது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேதரின் மிடில்டனை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி அவர்களின் திருமணம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான விரிவான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இதனால் லண்டன் நகரமே கடந்த சில நாட்களாக விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க 50 நாட்டு தலைவர்கள் உட்பட சுமார் 2000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நேற்று காலை இங்கிலாந்து நேரப்படி 8.15 மணிக்கு துவங்கின. இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தேவாலயத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் குடும்பத்தினரும் அடுத்தடுத்து தேவாலயத்திற்கு வந்தனர். மணமகள் கேதரின் குடும்பத்தினர் தேவாலயம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தனர். முன்னதாக மணமகன் வீட்டார் தேவாலயத்திற்கு வந்ததும், மணமகள் குடும்பத்தினரும் தேவாலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30) திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பிரிட்டீஷ் ராஜகுடும்பத்து திருமணங்கள் எப்போதுமே மிக விமர்சையாக நடத்தப்படும். அதைப்போலவே இந்த திருமணமும் வெகு விமரிசையாக நடந்தது. அதுவும் வில்லியம் பட்டத்து இளவரசர் என்பதால் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன. இந்த திருமணத்தைக் காண தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு குவிந்திருந்தார்கள். தாமதமாக சென்றால் இடம் கிடைக்காது என்பதால் நேற்று முன்தினமே தேவாலயம் பகுதியிலும், மணமக்கள் அரண்மனைக்கு செல்லும் பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அப்பகுதிகளில் திரண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் உலகமே ஆவலோடு எதிர்பார்த்த பிரிட்டீஸ் இளவரசர் வில்லியம் அவரது காதலி கேதரின் ஆகியோரது திருமணம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபேயில் உள்ள தேவாலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. அங்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. முன்னதாக மணமக்கள் இருவரும் ஊர்வலமாக காரில் அழைத்துவரப்பட்டனர். அவர்களை வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தனர். பின்னர் தேவாலயத்திற்கு மணமக்கள் வந்து சேர்ந்தனர். தனது 10 ஆண்டுகால காதலி கேதரின் விரலில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மோதிரம் அணிவித்து திருமணத்தை உறுதி செய்தார். அப்போது இருவரும் திருமண உறுதியேற்றுக்கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தால் அந்த தேவாலயமே அதிர்ந்தது. பின்னர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. டயானா மறைவுக்கு பிறகு இப்படி ஒரு சிறப்பான திருமணம் லண்டனில் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சார்லஸ், டயானா திருமணத்திற்கு பிறகு அரச குடும்பத்தில் இப்படி ஒரு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் மண்டியிட்டு நிற்க திருமண ஒப்பந்தம் வாசிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 90 தொலைக்காட்சிகள் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தன. 2001 ம் ஆண்டு ஆண்ட்ரூ பல்கலையில்தான் கேத்ரினை சந்தித்தார் இளவரசர் வில்லியம். இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்தது. இந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நேற்று திருமணத்தில் முடிந்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் கேதரின். நேற்று இளவரசரை கரம் பிடித்ததன் மூலம் இவரும் அரச குடும்பத்தில் இணைந்து விட்டார். 350 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் புறப்பட்டு சென்றனர். சார்லஸ், டயானா தம்பதிகள் சென்ற அதே சாரட் வண்டி நேற்று இவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இவர்களை பின் தொடர்ந்து ராணி எலிசபெத்தும் சென்றார். இவர்களது அணிவகுப்பு பக்கிம்ஹாம் அரண்மனையை அடைந்தது. முன்னதாக இவர்கள் செல்லும் வழியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தம்பதிகளை பார்த்து உற்சாக வெள்ளத்தில் கையசைத்தனர். பின்னர் அரண்மனை மாடத்திற்கு சென்று தம்பதிகள் மக்களுக்கு காட்சியளித்தனர். அப்போது இளவரசர் வில்லியம், கேதரினுக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டார். முன்னதாக, இந்த திருமணத்தின் போது கேதரின் விரலில் மோதிரம் அணிவித்த வில்லியமும், அவரது மனைவி கேதரினும் இன்பத்திலும், துன்பத்திலும் இனி இணைபிரியாது இருப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு தேவாலய பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இந்த திருமணத்தையடுத்து கேம்பிரிட்ஜ் கோமகன் ஆகியிருக்கிறார் இளவரசர் வில்லியம். இந்த திருமணத்தையொட்டி லண்டனில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். லண்டன் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த திருமணத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். முன்னதாக திருமணத்தின்போது இளவரசர் வில்லியம் ராணுவ கர்னல் போன்று சிவப்பு உடையணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். கேதரின் பாரம்பரிய வெள்ளை உடையில் புன்னகையுடன் காணப்பட்டார். வில்லியமை கரம்பிடித்ததன் மூலம் தற்போது அவர் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்