எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.14 - அரசியல் வாழ்வில் விரக்தியின் விளிம்பிலிருக்கும் வைகோ தமிழக விவசாயிகள் விரக்தியில் இருப்பதாக கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தாமோதரன், தமிழகத்தில் 2-வது பசுமை புரட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா தீட்டியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அரசியல் வாழ்வில் விரக்தியின் விளிம்பில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விவசாயிகள் வாழ்வில் விரக்தி என்று அறிக்கை விட்டிருப்பது காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல், தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியினை உருவாக்கும் வகையில் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி முறை, துவரையில் நடவு முறை, நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை, துல்லிய பண்ணையம் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக, 2011-2012 ஆம் ஆண்டில் 101.52 லட்சம் டன் அளவு உணவு தானிய உற்பத்தியை எய்தி தமிழகம் சரித்திர சாதனை படைத்தது. இதற்காக மத்திய அரசின் 'கிரிஷி கர்மான் விருது' தமிழகத்திற்கு கிடைத்தது.
2012-2013 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில், தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்த சழ்நிலையிலும், தமிழகத்திற்கு உரிய காவேரி நீரை கர்நாடகம் திறந்துவிடாத சழ்நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் உற்பத்தி குறித்து ஒவ்வொரு நிலையிலும் கூர்ந்தாய்வு செய்ததன் விளைவாக, 71.98 லட்சம் ஏக்கர் பரப்பில் உணவு தானிய பயிர் சாகுபடி செய்யப்பட்டு, 60.75 லட்சம் டன் உணவு தானியம் தமிழ்நாட்டில் உற்பத்தி என கணிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர் மட்டும் 39 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. உண்மைநிலை இவ்வாறிருக்க, தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்ததால், விவசாயம் முழுமையாக பொய்த்துப் போய்விட்டது என்ற வைகோவின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்பதை வைகோவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வைகோ தனது அறிக்கையில், விைவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலையில் விவசாயத்தை விட்டு விட்டு, மாற்று வழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதாகவும், கிராமங்களில் மக்கள் தொகை மிகவும் குறைந்துவிட்டதாகவும், அதனால் நகர்ப்புறத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது எனவும் இதனால் விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும், கோடிக்கணக்கான விவசாயிகள் வாழ்வு பாலைவனமாகி விடும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தக் கூற்றும் ஏற்கத்தக்கதல்ல.
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு செயல்பட்டு வருவதன் காரணமாக, தொழில் வளர்ச்சி பெருகி, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக நகர்ப்புறங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர். இது தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதே சமயத்தில், இதன் காரணமாக, விவசாயம் குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், உயர் தொழில்நுட்பங்களையும், புதிய உத்திகளையும் விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, வேளாண் உற்பத்தியை உயர்த்திட நடவடிக்கை எடுத்ததுடன், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலையிலும் நெல் சாகுபடி மேற்கொள்ள சமுதாய நாற்றங்கால் மற்றும் நேரடி நெல் விதைப்பு போன்ற புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு செயல்படுத்துவதற்கு 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சம்பா சிறப்புத் தொகுப்புத்திட்டம், வாடும் நிலையில் இருந்த நெற்பயிரைக் காப்பாற்ற 69 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் சிறப்பு உதவிகள், சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தும் வகையில் தரிசு நிலங்களை சீர்திருத்துதல், நுண்ணீர் பாசனங்களுக்கு மிக அதிக அளவு மானியம், நீர் ஆதார வளத்தினை பெருக்கிட 70,000 பண்ணைக் குட்டைகளை அமைத்தல், வேளாண் பணியாளர் பற்றாக்குறையினை போக்கும் வகையில் இயந்திரங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல், வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற முனைப்பான, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ளார்கள் என்பதையும், வைகோவுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் என்ற கற்பனை வாதத்தை வைகோ கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விரல்விட்டு எண்ண முடியாத அளவில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது என்ற திரு. வைகோவின் வாதம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
இந்தியாவிலேயே வறட்சிக்கு நிவாரணம் தந்த ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்பதை இந்தத் தருணத்தில் வைகோவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இது மட்டுமல்லாமல், வறட்சியினால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில், டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளையும் தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்காக, விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் அரசே செலுத்தியது. டெல்டா மாவட்டங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசல் பாதித்த 3.61 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15,000/- ரூபாய் வீதம், 3 லட்சத்து 52 ஆயிரத்து 613 விவசாயிகளுக்கு 524.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களைப் பொறுத்தவரையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு 5,000 ரூபாயும், பாசன ஆதாரமுள்ள நிலங்களில் இதர பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாயும், பாசன ஆதாரமற்ற நிலங்களில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 3,000 ரூபாயும், தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 4,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 16.03 லட்சம் விவசாயிகள் இது வரை பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணமாக 756.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர் காப்பீடு செய்த விவசாயிகள், பயிர் காப்பீட்டுத் தொகையினையும் பெறுவர். வறட்சிப் பணிகளுக்காக மொத்தத்தில் 3,881 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, மனம் போன போக்கில் அரசியல் அனுபவம் மிக்க வைகோ பேசுவது அழகல்ல.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் என்பது எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயன்தராது. ஏன் எனில், பயிர் காப்பீட்டுத்திட்டம் என்பதே எங்கும் செயல்படுத்தப்பட்டது இல்லை. விவசாயிகள் அத்திட்டத்தில் சேர்ந்ததும் இல்லை. எனவே, இந்த அணுகுமுறை கைவிடப்படவேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதையும், இந்தத் திட்டம் 2000 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், 2012-13 ஆம் ஆண்டில் சாகுபடி மேற்கொண்டு, 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசல் இழப்பு ஏற்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் திரு. வைகோ அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வைகோ சொல்வது போல், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
பயிர் எடுப்புக் கணக்கைப் பொறுத்தவரையில், கிராம நிர்வாக அதிகாரிகளும், வேளாண்மைத் துறை அலுவலர்களும் இணைந்து ஒவ்வொரு கிராமத்திலும் ஆய்வு செய்து,50 விழுக்காட்டிற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிர்களை எவ்வித விடுதலுமின்றி கணக்கெடுத்துள்ளனர். எனவே, இதில் பயிர் எடுப்புக் கணக்கு முறையாக செய்யப்படவில்லை என்ற வாதமே விதண்டாவாதம் என்பதை வைகோவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
புள்ளி விவரங்களுடன் கருத்தைத் தெரிவிக்கும் வைகோ, வறட்சி நிவாரணம் வழங்கிய விஷயத்தில் எவ்வித புள்ளி விவரத்தையும் சுட்டிக்காட்டாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசியிருப்பது விரக்தியின் விளிம்பில் அவர் இருப்பதை தெளிவாக்குகிறது. இனி வருங்காலங்களில், உண்மை நிலையை உணர்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவரை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்