முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் கனமழை: 13 பேர் பரிதாப பலி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்,ஜூன்.18 - குஜராத் மாநிலத்தில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 13 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.  வடமாநிலங்களில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்தது. குஜராத் மாநிலத்தில் நேற்றிரவு தொடர்ந்து மழை கொட்டியது. சராசரியாக 26 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிர பகுதியில் கனமழை காரணமாக 9 பேர் உயிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் விவசாயிகள். பாப்ரா தாலுகாவில் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அகமாதாபாத்தில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த தம்பதியர் மரம் முறிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். கோம்டிபூரில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஒரு குழந்தை ஷாக் அடித்து பலியானது. குஜராத்தில்மழை வெள்ளம் காரணமாக ஒரே நாளில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதே போல் உத்ரகாண்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்