எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 11 - காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து கர்நாடகம் மறுத்து வருவதால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை கடந்த 5.2.2007 ல் வெளியிட்டது. தீர்ப்பு விபரம் கடந்த 19.2.2013 ல் மத்திய அரசின் கெஜட்டில் வெளியானது. இதையடுத்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அமலுக்கு வந்துள்ளது. இதை கண்காணிக்க காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அதிகாரி தலைவராக இருப்பார். இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில உயரதிகாரிகளும் வேளாண்மை நிபுணர்களும் இடம் பெறுவர்.
பிரச்சினைகள் ஏற்படும் போது இந்த குழு கூடி பிரச்சினைகள் குறித்து பேசி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கும் என்பது தீர்ப்பின் முக்கிய அம்சம். ஆனால் மத்திய அரசு 2 குழுக்களையும் அமைக்கவில்லை. இக்குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு இரு குழுக்களையும் அமைக்கும் வரை தற்காலிக மேற்பார்வை குழு அமைக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே 24 ம் தேதி தற்காலிக மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் நீர் மட்டம் மிக குறைவாக இருந்த நிலையில் அந்த மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடும்படி தமிழகம் கர்நாடகாவிடம் கேட்டது. ஆனால் கர்நாடகம் மறுத்து விட்டது.
இந்நிலையில் ஜூன் 1 மற்றும் 12 தேதிகளில் காவிரி மேற்பார்வை குழு டெல்லியில் கூடியது. இரு கூட்டங்களிலும் கர்நாடகம் தண்ணீர் விட மறுத்து விட்டது. மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட தற்காலிக குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அடித்துக் கூறியது கர்நாடகம். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அமைக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு ஜூலை 1 ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி அல்தமாஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து வரும் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
எனவே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா என்பது நாளை தெரியவரும். காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் காவிரி இறுதி தீர்ப்புப்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து டெல்டாவின் தேவையை சமாளிக்க முடியும். இந்நிலையில் வரும் 15 ம் தேதி காவிரி மேற்பார்வை குழுவின் 3 வது கூட்டம் டெல்லியில் கூடுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும்படி தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் அலோக்ராவத் கடிதம் அனுப்பி உள்ளார். இவர் கடந்த 1 ம் தேதிதான் நீர்வள துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டத்திலும் தமிழகம் சார்பில் கடந்த மாதத்தில் தர வேண்டிய 10 டி.எம்.சி. தற்போது தர வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை தரும்படி மீண்டும் வலியுறுத்தப்படும் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.