முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலை எதிர்கொள்ள ஐதராபாத்தில் மோடி இன்று பேசுகிறார்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஆக. 11 - லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். லோக்சபா தேர்தலை நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி எதிர்கொள்கிறது. அவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டும் வருகிறார். ஆந்திராவின் ஐதராபாத்தில் புதிய பாரதத்தின் இளைஞர்கள் முழக்கம் என்ற தலைப்பில் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பாரதீய ஜனதா. இந்த பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சியின் எந்த தலைவர்களுக்கும் அளிக்கப்படாத முக்கியத்துவம் மோடிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ. 5 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மோடியை வரவேற்கும் வகையில் பிரமாண்ட பேனர்கள், சுவரொட்டிகள் நகரம் முழுவதும் அச்சடிக்கப்பட்டு உள்ளது. எந்த சுவரொட்டியிலும் அத்வானி படம் இல்லை. மோடியின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. கூட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களிலும் மோடியின் முழு உருவபடமே இடம் பெற்று உள்ளது. மழை பெய்தாலும் பொதுக் கூட்டம் பாதிக்கப்படக் கூடாது என்றபதற்காக கூட்டத்தில் வருபவர்களுக்கு இலவச குடை வழங்கப்படுகிறது. இதற்காக மோடியின் படம் பொறித்த 50 ஆயிரம் குடைகள் ஐதராபாத் வர வழைக்கப்பட்டுள்ளனவாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்