எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராமேஸ்வரம் : இந்திய - இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறகிறது. திருவிழாவில் இந்திய - இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலில் புயல், இயற்கைச் சீற்றம் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களின் வழிபாட்டிற்காக கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை 1913-ம் ஆண்டில் நிறுவினர். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் , ராமேசுவரம் பங்குத்தந்தை அசோக் வினோவிற்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகள், 36 பெண் குழந்தைகள் என மொத்தம் 3,464 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
கச்சத்தீவு திருவிழாவிற்கு ராமேசுவரத்திலிருந்து செல்வதற்கு 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில் செல்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு செல்பவர்களுக்கு மார்ச் 13 (வியாழக்கிழமை) படகு உரிமையாளர்கள் மூலம் பயண அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
மார்ச் 14 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணியிலிருந்து ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் சுங்கத் துறையின் சோதனைக்கு பிறகு படகுகள் கச்சத்தீவிற்கு புறப்பட ஆரம்பிக்கும். மறுநாள் மார்ச் 15 சனிக்கிழமை திருவிழா முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு அனைத்து விசைப்படகுகளும் மாலை 5 மணிக்குள் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்தை வந்தடையும்.
கச்சத்தீவில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அந்தோணியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி பூஜையும், இரவு அந்தோணியாரின் தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் 2-வது நாளான சனிக்கிழமை காலை 7 மணியளவில் திருப்பலி பூஜைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் நடைபெறும். கூட்டுப் பிரார்த்தனைக்கு பிறகு கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடையும்.
மேலும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய-இலங்கை இருநாட்டு பக்தர்களும் உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்நாட்டு கடற்படையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு வருபவர்கள் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்தி விட்டு வரவோ, புகைப்பிடிக்கவோ, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரவோ அனுமதி கிடையாது. லேப் டாப், கணினி மற்றும் காமிரா உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவில் உணவு சமைக்கவோ, சேலை, கைலி, துணி வகைகள், சோப்பு, எண்ணெய் போன்றவைகள் வியாபாரம் மற்றும் பண்டமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
வரும் 18-ம் தேதி தமிழக அனைத்துக்கட்சி கூட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு
12 Mar 2025சென்னை : தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக வரும் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்ப
-
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பில் 16 தீவிரவாதிகள் சுட்டு கொலை
12 Mar 2025பாகிஸ்தான் : ரயில் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-03-2025.
12 Mar 2025 -
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்
12 Mar 2025தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
-
அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் நாளை முழு சந்திர கிரகணம்
12 Mar 2025சென்னை : வானில் நிகழும் அரிய நிகழ்வுகள் வானியல் ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அந்த வகையில் சந்திர கிரகணம் தோன்றும் காட்சியை பார்த்து ரசிப்பார்கள்.
-
ரஷ்யா-உக்ரைன் இடையே 30 நாட்கள் போர்நிறுத்தம் : பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள்
12 Mar 2025ரஷியா : ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
-
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது
12 Mar 2025விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழன
-
நாளை முதல் 2 நாட்கள் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் 8,000 பேர் பங்கேற்பு
12 Mar 2025ராமேஸ்வரம் : இந்திய - இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறகிறது.
-
3 நாட்கள் பயணமாக அமித்ஷா அசாம் செல்கிறார்
12 Mar 2025புதுடெல்லி : 3 நாள் பயணமாக அசாம் செல்லும் அமித்ஷா அஙகு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
-
தி.மு.க. புதிய மாணவரணி செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் நியமனம் துரைமுருகன் அறிவிப்பு
12 Mar 2025சென்னை தி.மு.க.வின் புதிய மாணவரணி செயலாளர், கொள்கை பரப்பு செயலாளரை நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
ராமேசுவரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கம்
12 Mar 2025சென்னை : ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
-
மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
12 Mar 2025மதுரை : மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
-
தொகுதி மறுவரையறை ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டம்: ஆந்திரா, கர்நாடகா கட்சிகளுக்கு தமிழ்நாடு குழு நேரில் அழைப்பு : அமைச்சர்கள் குழு சந்தித்து அழைப்பு விடுத்தது
12 Mar 2025புதுடெல்லி : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.
-
பெரியார் குறித்து பேச்சு:நிர்மலா சீதாராமனுக்கு த.வெ.க. தலைவர் பதில்
12 Mar 2025சென்னை : பெரியார் குறித்து நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு விடுமுறை
12 Mar 2025புதுடெல்லி : ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு இன்று விடுமுறை விடபட்டுள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் ஜெகன் மோகனுடன் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு
12 Mar 2025ஆந்திரா : மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் ச
-
அரியானா உள்ளாட்சி தேர்தல்: பாரதிய ஜனதா அபார வெற்றி
12 Mar 2025சண்டிகர் : அரியானா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.
-
மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கியது அரசு
12 Mar 2025சென்னை : மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.
-
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு : செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தகவல்
12 Mar 2025அமெரிக்கா : அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
-
மியான்மர் சைபர் மோசடியில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு
12 Mar 2025புதுடெல்லி : மியான்மர் - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெள
-
வருகிற 22-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்
12 Mar 2025சென்னை : கிராம சபைக் கூட்டம் வருகிற 22-ம் தேதி நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
12 Mar 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
-
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்
12 Mar 2025பெங்களூர் : மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.
-
சீமானும், அண்ணாமலையும் நிழலோடு யுத்தம் செய்கிறார்கள்: அமைச்சர் பதில்
12 Mar 2025சென்னை : சீமானும் அண்ணாமலையும் நிழலோடு யுத்தம் செய்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழகத்தின் நிலைபாட்டுக்கு கர்நாடகா முதல்வர் ஆதரவு : அமைச்சர் பொன்முடி பேட்டி
12 Mar 2025பெங்களூரு : கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.