முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்பித்ததை ஒட்டி, தர்பூசணி விற்பனை படு ஜோராக களைக்கட்டியது. இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு சோதனையில் இறங்கினர். அப்போது, அவர்கள் சில கடைகளில் தர்பூசணிகளை சோதனை செய்து அந்த பழங்களை அகற்றினர். அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, மக்களிடையே அச்சம் பரவ தொடங்கியது. தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.

மக்களிடையே தர்பூசணி குறித்த பயம் தொற்றிக்கொண்டதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ் குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களை கவனிப்பார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து