எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.20 - நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களிலும், அ.தி.மு.க. மட்டும் 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா 3 வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
2006 ல் மைனாரிட்டியாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பதவியேற்றது முதல் தமிழக நலனில், மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனது குடும்ப நலனிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினர் அராஜகங்களை அரங்கேற்றினர். இது தவிர, அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஒருவேளைக்கு கூட நல்ல சாப்பாடு சாப்பிடுவது கஷ்டமாகி விட்டது.
இத்துடன் தினம் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் துன்பம் அடைந்து வந்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களும் பாதிப்படைந்தன. சிறு, குறு தொழில் அதிபர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.
அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினரின் ஊழல் பன்மடங்கு அதிகரித்தது.கட்டப் பஞ்சாயத்து அடிதடி அராஜகங்களும் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்தாடின. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஊழல் இல்லாத இடமோ, துறையோ இல்லாத அளவிற்கு ஊழல் மிகவும் மலிந்து விட்டது. இது தவிர மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஏழை, எளியவர்களிடம் நிலங்களை அபகரித்தல், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க.வினரின் காண்டிராக்ட் ஊழல், எடுத்த பணிகளை தரமற்றதாக செய்து கொள்ளை. தி.மு.க.வின் ஊழலுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஸ்பெக்ட்ரம் ஊழலும், சினிமாத் துறையில் கருணாநிதியின் குடும்பத்தினரின் அட்டூழியமும், கேபிள் கொள்ளை ஆகியவற்றால் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இது தவிர பெண்கள் தனியாக ரோட்டில் நடமாட முடியவில்லை. வழிப்பறி திருடர்களின் அராஜகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பூட்டிய வீடுகளில் உடைத்து கொள்ளை, நகைக் கடைகளை உடைத்து கொள்ளை, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், முதியோர்கள் கொலை செய்யப்பட்டு நகை, பணம், பொருட்கள் கொள்ளை ஆகியன தினம் நடந்து வந்தது. தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தி.மு.க.வை தோற்கடிக்கவும் முடிவு செய்திருந்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலை போன்றே பல இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கருணாநிதி வெளியிட்டார். பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்பு காங்கிரசுக்கு 63 இடங்களை கொடுத்து பா.ம.க. விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான இடங்களை கொடுத்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. இலவச கேஸ் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதாலும், தேர்தல் அறிக்கையாலும் கூட்டணி கட்சிகளின் பலத்தாலும் தேர்தலில் மக்கள் தனக்கு ஓட்டளிப்பார்கள், வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தில் விட்டு வைத்த இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும், தமிழக மக்களின் உழைப்பை சுரண்டவும் கருணாநிதி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் தி.மு.க வுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் இருந்தனர் என்பதை கருணாநிதியால் கணிக்க இயலவில்லை. அரசியலில் சாணக்கியர் என்று அவரது கட்சியினரால் கூறப்படும் கருணாநிதியால் 2011 ல் தமிழக மக்களின் மன நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்தனர். தி.மு.கவின் செல்லப் பிள்ளைகள் என அழைக்கப்பட்ட அரசு ஊழியர்களும் தி.மு.க.வினரால் பாதிக்கப்பட்டதால் அவர்களும் தி.மு.க.வை எதிர்க்க முடிவு செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல், புதிய இளம் வாக்காளர்களை பாதித்ததால் அவர்களும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயாராகினர். இவற்றை எல்லாம் அறியாத கருணாநிதி தி.மு.க. கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வந்தார். தேர்தல் முடிந்த பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் தினம் ஒருவராக கருணாநிதியை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அறிக்கை வெளியிட்டு கருணாநிதிக்கு மன ஆறுதலை ஏற்படுத்தி வந்தனர்.
தேர்தல் நாளன்று மக்கள் மாபெரும் மவுன புரட்சியை ஏற்படுத்தினர்.ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கப்பட்டாலும் காலை 7 மணிக்கே பூத்களில் மக்கள் வரிசைகளில் நிற்க தொடங்கினர். காலையில் வரத் தொடங்கிய மக்கள் மாலை வரை சாரைசாரையாக கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக ஓட்டளித்து சென்றனர். இது வரை ஓட்டளிக்க வெளியில் வராத மேல்தட்டு மக்களும் இந்த தேர்தலில் காலை 7 மணிக்கெல்லாம் ஓட்டு சாவடிக்கு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்த நிலையிலும் பூத்துக்கு 50 முதல் 300 பேர் வரை ஓட்டளிக்க வரிசையில் நின்றனர். அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு சில பூத்துகளில் இரவு 9 மணி வரை மக்கள் ஓட்டளித்தனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரித்தது. ஏற்கனவே ஆட்சிக் கட்டில் தனக்கே என பகல் கனவில் இருந்த கருணாநிதியும், அவரது சகாக்களும், ஓட்டு சதவீதம் அதிகரித்த போதெல்லாம் தி.மு.கவே ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் இந்த முறையும் தி.மு.க. ஆட்சியை பிடிப்பது உறுதி என புளகாகிதம் அடைந்து இருந்தனர். மே 13 அன்று ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டன. அதில் மக்களின் மவுன புரட்சி அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. அ.தி.முக. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
12 மாவட்டங்களில் தி.மு.க. 0:
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக வென்ற 12 மாவட்டங்கள் விபரம்:
மதுரை(10), திருவள்ளூர்(10), காஞ்சிபுரம்(11), தருமபுரி(5), சேலம்(11), நாமக்கல்(6), ஈரோடு(8), திருப்பூர்(8), கோவை(10), கடலூர்(9), நாகப்பட்டினம்(6), புதுக்கோட்டை(6). ஆகிய இடங்களில் அ.தி.மு.க கூட்டணி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது. இந்த 12 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது.
14 மாவட்டங்களில் தி.மு.க தலா 1:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி 7, தி.மு.க. கூட்டணி 1
விழுப்புரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 10, தி.மு.க கூட்டணி 1
நீலகிரியில் அ.தி.மு.க. கூட்டணி 2, தி.மு.க.கூட்டணி 1
திருச்சியில் அ.தி.மு.க. கூட்டணி 8, தி.மு.க. கூட்டணி 1
பெரம்பலூரில் அ.தி.மு.க. தி.மு.க. கூட்டணி தலா 1
அரியலூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 1
தஞ்சாவூரில் அ.தி.மு.க, கூட்டணி 7, தி.மு.க.கூட்டணி 1
தேனியில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
சிவகங்கையில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி 6, தி.மு.க. கூட்டணி 1
தூத்துக்குடியில் அ.தி.மு.க. கூட்டணி 5, தி.மு.க. கூட்டணி 1
திருநெல்வேலியில் அ.தி.மு.க. கூட்டணி 9, தி.மு.க. கூட்டணி 1
இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த 14 மாவட்டங்களிலும் தி.மு.க. கூட்டணிக்கு தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
4 மாவட்டத்தில் தி.மு.க. தலா 2. :
சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி 14, தி.மு.க. கூட்டணி 2
வேலூரில் அ.தி.மு.க. கூட்டணி 11, தி.மு.க. கூட்டணி 2
திருவாரூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 2
கன்னியாகுமரியில் அ.தி.மு.க. கூட்டணி 4, தி.மு.க. கூட்டணி 2
இந்த 4 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் தி.மு.க கூட்டணி 3 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.
நடந்து முடிந்த 14 வது சட்டசபை தேர்தலில் 12 மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி முழுமையாகவும், மீதமுள்ள 32 மாவட்டங்களில் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணியே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.