எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.21 - 'அம்மா திட்டம்' திட்டத்தின் மூலம் மாநிலம் முழுதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், 18.41 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறியுள்ளார்.
மேலும், வருவாய்த் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும், உரிய நேரத்தில், அது உரிய மக்களைச் சென்றடைந்திட அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்ற,வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணாஅதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
அனைத்துத் துறைகளுக்கும் தாய்த் துறையாகவும், அரசாங்கத்தின் முதுகெலும்பாகவும், ஏழை எளிய மக்களின் துயர்களைக் களைந்து, அவர்களை ஏற்றிவிடும் ஏணியாகவும் விளங்கிடும் துறை வருவாய்த்துறையாகும்'. முதலமைச்சர் வருவாய்த்துறையைப் பற்றி மிகுந்த பெருமையோடு சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.
வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் செயல் பாடுகள் குறித்து, வருவாய்த்துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வருவாய்த்துறை அமைச்சர். பி.வி.ரமணா தலைமையில், வருவாய்த்துறையின் செயலர் மற்றும் துறைத்தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தலைமைச்செயலகம் திட்டக்குழு கருத்தரங்க கூடத்தில் நேற்று (20.12.2013) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் செயலர் ககன் தீப் சிங் பேடி, வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் தி. ஸ்ரீ. ஸ்ரீதர்,நிலஅளவை . ரமேஷ் ராம் மிஷ்ரா, நில நிருவாக ஆணையர் முனைவர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன் ,நிலச் சீர்திருத்த ஆணையர் திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் ., நகர்புற நிலவரி மற்றும் நகர்புற நிலவரித்திட்ட இயக்குநர் பி. அண்ணாமலை, பேரிடர் மேலாண்மை கூடுதல் ஆணையர் ஆஷிழ சாட்டர்ஜி, மற்றும் வருவாய் நிருவாக இணை ஆணையர் முனைவர் மு.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களான, முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டு பொது மக்களிடம் மிகுந்த நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள 'அம்மா' திட்டம், புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்குதல், வருவாய்த்துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான, தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகங்கள் (மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்), வருவாய் கோட்ட, வட்டங்களுக்கான புதிய கட்டடங்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிருவாக அலுவலர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், பணிகளை விரைந்து மேற்கொள்ள புதிய வாகனங்கள், கணினி மற்றும் மடிக்கணினிகள், விரைவு பட்டா மாறுதல் திட்டம் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிடும் திட்டம், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள், பள்ளி மாணவ மாணவியர்களுக்குத் தேவையான அனைத்து வகையான சான்றிதழ்களையும் தாம் பயிலும் பள்ளிகளிலேயே பெற்றிடும் உன்னதத் திட்டம், பெண்களை பெரிதும் கவர்ந்துள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கிடும் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிவாரண உதவித் தொகை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டம், வருவாய்த்துறை ஆவனங்களை கணினி மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
இறுதியாக அமைச்சர் அவர்கள் தமது உரையில், முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்கிற உயரிய நோக்கமதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு, நல்ல பல திட்டங்களை நாளும் தந்த வண்ணமுள்ளார்கள். குறிப்பாக, வருவாய்த் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும், உரிய நேரத்தில், அது உரிய மக்களைச் சென்றடைந்திட நாம் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி, நமது துறைக்கும், முதலமைச்சர் அவர்கட்கும் பெருமையினைத் தேடி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் வருவாய்த்துறையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு, மிகவும் குறுகிய காலத்தில் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள திட்டம் 'அம்மா திட்டம்' ஆகும். இத்திட்டத்தின் மூலம் நாளதுவரையில், மாநிலம் முழுதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏறத்தாழ 12,666 முகாம்கள் நடத்தப்பட்டு, பெறப்பட்ட 33.13 இலட்சம் மனுக்களில்,18.41 இலட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 26,651 மனுக்கள் பிறதுறையின் நடவடிக்கைக்காக அனுப்பட்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனை என்றால் அது மிகையில்லை. அம்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி, மாவட்ட வாரியாக புள்ளி விவரங்களை உள்ளடக்கிய கையேட்டினை வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா வெளியிட்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.