எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - தமிழகத்தை ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி தாக்கிய 9_வது ஆண்டு நினைவு நாளை யொட்டி நேற்று கடற்கரையில் மலர்களை தூவி, பால் வார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 9 ஆண்டுகளுக்கு முன்னர்.(2004_ டிசம்பர் 26) இதே நாளில் இந்தோனேசியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆழிப்பேரலை இந்தியாவை தாக்கியது. இதில் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்ஆழ்கடலில் இருந்து எழும்பிய அலை அரக்கன் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனித உயிர்களை ருசி பார்த்தான். 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
அமைதியே உருவான கடல் அன்னையின் இன்னொரு கோர முகத்தை அப்போது தான் உலகம் கண்டது. சென்னையில் இருந்து குமரி வரை கடலோர கிராமங்களில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமி பேரலைகள் ஆயிரக் கணக்கானோரை கடலுக்குள் அடித்துச்சென்றது. இவர்களில் யாரும் உயிர் தப்பவில்லை. அன்றைய தினம் கடற்கரை கிராமங்கள் முழுவதும் மரண ஓலம் ஒலித்தது. தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது.
நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி என அனைத்து மீனவ கிராமங்களிலும் கொத்து கொத்தாக பிணங்கள் கரை ஒதுங்கின.
முதலில் சத்தமில்லாமல் வந்து விட்டு கடலுக்குள் சென்ற சுனாமி அலையை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு ஓடிய சின்னஞ்சிறுசுகளின் சப்த நாடியும் சிறிது நேரத்திலேயே அடங்கிப்போனது.
இப்படி ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசமில்லாமல் அத்தனை பேரின் மூச்சுக் காற்றையும் ஒரே நொடியில் நிறுத்தி நிசப்தமாகி விட்டாள், கடல் அன்னை.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்தது நாகை மாவட்டம்தான். அங்கு 6 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தில் ஆயிரம் பேரை சுனாமி காவு வாங்கியது. சென்னையில் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
9 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் சுனாமியின் சோக சுவடுகள் கடற்கரை கிராமங்களில் இன்னும மாறாத வடுவாகவே உள்ளது.
இதனை உணர்த்தும் வகையில் நேற்று தமிழக கடலோரங்களில் 9_ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. ஆழிப்பேரலை தாக்கிய 9_வது ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் மக்கள் மலர்களை தூவி, பால் வார்த்து தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள்.
சென்னையில் மெரினா கடற்கரையில் பிஜேபி மீனவர் அணி சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் , மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய், நிர்வாகிகள் டால்பின் ஸ்ரீதர், மீனவர் அணி செயலாளர் செம்மலர் சேகர் உள்ளிட்டோர் அவ்வையார் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். சென்னை அரசினர் கவின் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மெரினா கடற்கரையில் ஆழிப் பேரலையில் மடிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணற்சிற்பத்தை வடிவமைத்திருந்தனர்.
அங்கு ஏராளமான மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் இதய அஞ்சலி செலுத்தினார்கள். அதேபோல் வடசென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இந்திய மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் தயாளன் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து கடலில் பால் ஊற்றி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ராயபுரம் எம்எல்ஏ டி.ஜெயக்குமார், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, மற்றும் அதிமுக நிர்வாகிகள் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். 9_ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி காசிமேடு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
சென்னை பெசன்ட்நகரில் ஓடைமாநகர் மீனவர்கள் சார்பில் மலர்வளையத்தை கடலில் வைத்து அதன் மீது பாலை ஊற்றி இறந்தோருக்கு தங்கள் அஞ்சலி செலுத்தினர். மீனவ பெண்கள் கண்ணீர் வடித்து பிரிந்த சொந்தங்களுக்கு தங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்