முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கில் முஷாரப் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 1 மே 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே 2 - பாகிஸ்தானில் பலுசிஸ்தான் தேசியவாதத் தலைவர் அக்பர் புக்தி கொலை வழக்கில், அந்த நாட்டின்  மு்னனாள் அதிபர்  பர்வேஷ் முசாரப் நேரில் ஆஜராகுமாறு  பலுசிஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முசாரப் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் முசாரப் நேரில் ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி காஸி பேஸ் இசா உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, முசாரப்பின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளி்க்குமாறு முசாரப் தாக்கல் செய்த மனுவை தீவிரவாத தடுப்பு நீதிமன்றம்  தள்ளுபடி செய்ததை அடுத்து முசாரப் மேல் முறையீடு செய்திருந்தா.  இந்த வழக்கில் ஆஜராகுமாறு முசரப்புக்கு கோர்ட் 5 முறை உத்தரவிட்டிருந்தது.

முசாரப்அதிபராக இருந்தபோது, அவரது உத்தரவின்பேரில் பாதுகாப்புப் படையினர் அக்பர் புக்தியை கொன்றனர்.

      

       

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்