எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 9 - இலங்கை சிறையில் வாடும் 4 தமிழ் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:- கடந்த 1.6.2011 அன்று ராமேஸ்வரம் தங்கு தளத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 707 மீன் பிடி விசைப் படகுகளில், ராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்த பச 10 ஙஊஆ 581 என்ற விசைப் படகு மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் மற்றும் பச 12 ஙஊஆ 252 என்ற விசைப் படகு மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைத் தவிர இதர படகுகள் மற்றும் மீனவர்களின் கரை திரும்பி விட்டனர். இந்த இரண்டு படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்களும், மண்டபம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற இன்னொரு மீன் பிடி விசைப் படகான பச09 ஙஊஆ 153 என்ற விசைப் படகும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை.
ராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த 2 மீன் பிடி விசைப்படகுகள் மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மற்றும் மண்டபம் பகுதியினைச் சேர்ந்த ஒரு மீன் பிடி விசைப் படகு மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், ஆக மொத்தம் 13 மீனவர்களையும், 3 விசைப் படகுகளையும் கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை மூலம் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாகத் தேடி கண்டுபிடிக்க 2.6.2011 அன்று எனது அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடலோரக் காவல் படையினரால் தேடுதல் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த தருணத்தில், காணாமல் போன மூன்று விசைப் படகுகளில் ராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த பச 10 ஙஊஆ 581 என்ற விசைப் படகும் அதில் மீன் பிடிப்பு மேற்கொள்ளச் சென்ற 5 மீனவர்களும் மற்றும் மண்டபம் பகுதியினைச் சேர்ந்த பச 09 ஙஊஆ 153 என்ற மீன் பிடி விசைப்படகும் அதிலிருந்த 4 மீனவர்களும், ஆக மொத்தம் 9 மீனவர்களும் மீட்புப் படகுகள் உதவியுடன் 3.6.2011 அன்று காலை பத்திரமாக கரை திரும்பிவிட்டனர்.
ராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த பச12 ஙஊஆ 252 என்ற பதிவு எண் கொண்ட ஒரு படகு மட்டும் மோசமான பருவ நிலை காரணமாக காற்றின் வேகத்தால் இலங்கையிலுள்ள நெடுந்தீவு அருகிலுள்ள பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு அப்படகு மூழ்கியதாகவும், அப்படகில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்குத் துரையின் மகன் ஜெயக்குமார் (25), தேவக்குமார் மகன் பிரபாத் (28), திவ்யநாதன் மகன் சுந்தர் (50), கருப்பையா மகன் மாரிமுத்து (45) ஆகிய நான்கு மீனவர்களும் 8 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்து நீந்தி, இலங்கையிலுள்ள நைனாத் தீவில் பத்திரமாக கரை சேர்ந்ததாகவும் தகவல் பெறப்பட்டது.
இந்த நான்கு மீனவர்களும் இலங்கை ஊர்க் காவல் படையினரால் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்குத் தெரிவித்து, இச்செய்தியை உறுதி செய்திடுமாறும், மேற்குறித்த மீனவர்களுக்கு உரிய அனைத்து உதவிகளையும் செய்திடுமாறும், அவர்களை விரைவில் விடுவித்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்திட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாற அரசால் 3.6.2011 அன்று நிகரிச் செய்தி அனுப்பட்டது. மேலும், தொலைபேசி மூலமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த 4 மீனவர்களும் காங்கேசன் துறை நீதிமன்றத்தால் 17.6.2011 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக 6.6.2011 அன்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திடமிருந்து தொலைபேசி மற்றும் நிகரி மூலம் தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, நான் பாரதப் பிரதமருக்கு இதுபற்றி கடிதம் அனுப்பியுள்ளேன். நான்கு அப்பாவி மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வற்புறுத்துமாறு அதில் நான் பிரதமருக்கு கேட்டுக் கொண்டுள்ளேன்.
மீனவர்களின் நலனை பேணிக்காக்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும் எனவும் தலைமையிலான அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.