எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஸா, ஜூலை.28 - ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளையில், காஸாவைத் தாக்கும் இஸ்ரேல் டேங்கர்கள் வாபஸ் பெறும் வரை, ஐ.நா.வின் நடவடிக்கைக்கு இணங்க முடியாது என்று ஹமாஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 19 நாட்களாக நடை பெற்றுவரும் மோதலில் 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், சுமார் 40 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேல் கடுமையான பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காஸா பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் வான் வழியாக தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல், பின்னர் தரை வழியாகவும் தொடர்ந்தது. சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. நடுவே ஒருநாள் 5 மணி நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
பாலஸ்தீன பகுதியில் அமைதி நிலவ வேண்டுமென்றால் பாலஸ்தீனர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். இஸ்ரேல் பகுதி மீது எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. தற்காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதே இஸ்ரேலின் ஒரே பதிலாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து 12 மணி நேரம் மட்டும் போரை நிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. கேட்டுக் கொண்டதற்கு இணங்க 12 மணி நேரத்திற்கு போரை நிறுத்தியுள்ளோம். இதை மீறி ஹமாஸ் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஏராளமான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மீது வீசப்படுகின்றன. எனினும் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை பெரும்பாலும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகிறது. தரை வழியாக நாங்கள் முன்னேறியுள்ள பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள சுரங்கங்களை அழித்து வருகிறோம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்குக் கரை பகுதியில் வன்முறை வெடித் துள்ளது. இதில் இஸ்ரேல் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரமல்லா, பெத்லஹேம் ஆகிய பகுதிகளில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அதிகபட்சம் 7 நாட்களாவது போர் நிறுத்ததை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, கத்தார் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் பிரான்சில் நடைபெற்றது. எனவே விரைவில் மேலும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சூழலில், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து 24 மணி நேரத்துக்கு தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தமது ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆனால், காஸா நிலைகளில் இருந்து இஸ்ரேலிய டேங்கர்கள் விலக்கிக்கொள்ளப் படாத நிலையில், மனிதநேய அடிப்படையிலான போர் நிறுத்தத்தில் எந்த பலனும் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.