எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.29 - மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிடம் இடிபாடுகளுக்கு இடையே பிணங்கள் எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 12 அடுக்கு மாடிக்கட்டிடம் சரிந்து விழுந்து 100 -க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த அடுக்கு மாடிக்கட்டிடம் கட்டுவதற்கு விதிகளை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து ö சய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த 4-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக நீதிபதி ரெகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் குறித்து சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, நீதிபதி ரெகுபதி தலைவராக இருக்கும் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்தார்.
அதேபோல, கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், தற்போதைய நிலை குறித்தும் ஒரு அறிக்கையையும் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். அந்த அறிக்கைøயில், கட்டிடம் இடிந்து விழுந்ததும், மீட்பு படையினர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரண தொகையை வழங்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே எந்த பிணம் இல்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கூறியதாவது:-
மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே, மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் அவர் இருப்பதால், அவரால் எப்படி கட்டிடம் இடிந்து விழு ந்த சம்பவத்தை விசாரிக்க முடியும்? என்று இந்த ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால், இந்த நிலையில் நீதிபதி ரெகுபதி கடந்த 25-ந் தேதி அவசர அவசரமாக தன்னுடைய அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.
அதேநாளில், இந்த வழக்கை விசாரித்த மாங்காடு போலீசாரும், குற்றப்பத்திரிகையை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
அட்வகேட் ஜெனரல் :- மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் 90 சதவீத வழக்குகள் பைசல் செய்யப் பட்டுள்ளது. நீதிபதி ரெகுபதி தலைமையிலான விசாரணை கமிஷனில், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் பலர் இடம் பெற்று, பல்வேறு கோணங்களில் வி சாரணை நடத்தி, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளனர். தெருவில் பேசுகின்ற புரளி பேச்சுக்களை எல்லாம் வழக்காக தாக்கல் செய்ய முடியாது.
நீதிபதிகள்: - அந்த அறிக்கையில் யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது?
அட்வகேட் ஜெனரல்:- கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 600 சாட்சிகளின் வாக்குமூலம், 200 ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபர் கமிஷன் அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள்:- இந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு எந்த அதிகாரி அனுமதி வழங்கினார்?
அட்வகேட் ஜெனரல்:- சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.வில்) உள்ள அடுக்குமாடி கட்டிடம் கமிட்டி, இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
நீதிபதிகள்:- இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் மவுலிவாக்கம் கட்டிடம் இடிபாடுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எதிர்கால நலன்களையும் மனதில் கொண்டு இந்த வழக்கை விசாரிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கின்றோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.