எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.15 - மீனவர்கள் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸியை ஆதரித்து மாநகராட்சிக்கு உட்பட்ட `அண்ணாநகர்' என்ற இடத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் 18.9.2014 அன்று நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதற்காக நான் இங்கே வந்து இருக்கிறேன்.
எனது ஆட்சியின் மூன்று ஆண்டு கால சாதனைகளை எடை போட்டு அதன் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை டெல்லிக்கு வெற்றி நடை போட வைத்தீர்கள். மற்றக் கட்சிகளுக்கு அரசியலில் இருந்து நிரந்தர விடை கொடுத்துவிட்டீர்கள். இதன் எதிரொலியாக அனைத்துக் கட்சிகளும் இடைத் தேர்தலுக்கு விடை கொடுத்துவிட்டன.
சுயேட்சைகளும், எந்தத் தேர்தல் என்றாலும் அதில் பங்கு பெற வேண்டும் என்ற கொள்கை உடைய தேசிய கட்சியும் தான் தேர்தல் களத்தில் இருக்கின்றன. உள்ளபடியே சரியான போட்டியாளர் என்று பார்த்தால், உங்கள் நலன்களைக் காக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே களத்தில் இருக்கிறது.
மாநகராட்சி தேர்தலில், தேசிய கட்சிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு தலைமை. டெல்லியில் ஒரு தலைமை. தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாடு. டெல்லியில் ஒரு நிலைப்பாடு.
மீனவர்கள் நிறைந்த பகுதி தூத்துக்குடி. எனவே உதாரணத்திற்கு மீனவர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்துவதும்; சிறை பிடிப்பதும்; அவர்களது படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று நான் பாரதப் பிரதமர் அவர்களை நேரிலும் கடிதங்கள் வாயிலாகவும் வற்புறுத்தி வருகிறேன். இதன் காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இந்தப் பிரச்சனையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஒருவர் தமிழக மீனவர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார். தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க தான் தான் தடை போட்டதாக மார்தட்டிக் கொள்கிறார். இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி அவருக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மத்திய அரசோ மவுனம் காக்கிறது. இப்படிப்பட்ட இரட்டை நிலைப்பாடு உடைய கட்சிக்கு வாக்களிப்பது என்பது, தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது.
உங்களுக்காக, உங்களின் நலன்களுக்காக போராடுகின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். மீனவர் பிரச்சனையாக இருந்தாலும் சரி; விலைவாசி உயர்வு பிரச்சனையாக இருந்தாலும் சரி; இலங்கைத் தமிழர் பிரச்சனையானாலும் சரி; அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனையானாலும் சரி; தமிழகத்திற்காக; தமிழக மக்களுக்காக; குரல் கொடுக்கின்ற ஒரே மக்கள் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். குரல் கொடுப்பது மட்டுமல்ல, அந்தக் குரலுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழர் நலன் காக்கும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தான். தமிழர் நலன் காக்கும் அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.
கடந்த மூன்று ஆண்டுகளில் முத்தான திட்டங்களை நாங்கள் உங்களுக்கு அளித்து வருகின்றோம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்; ஏழை எளியோருக்கு வீடுகள் வழங்கும் திட்டம்; சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 1,000 ரூபாய் உதவித் தொகை; தாலிக்கு 4 கிராம் தங்கத்துடன் 50,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கும் திருமண உதவித் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, உயர்ந்து வரும் விலைவாசியில் இருந்து ஏழை மக்களை காப்பாற்ற, என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அவற்றை எல்லாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் அம்மா உணவகங்கள்; குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் அம்மா குடிநீர்த் திட்டம்; குறைந்த விலையில் பல்வேறு வகையான உப்புகளை வழங்கும் அம்மா உப்புத் திட்டம்; குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளை வழங்கும் அம்மா மருந்தகங்கள்; குறைந்த விலையில் காய்கறிகளை வழங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்; குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு வகைகள் பாமாயில் வழங்கும் திட்டம் என, மக்கள் நலத் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கென பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்து கொடுத்து இருக்கிறோம். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
7 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும்
8 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவக் கருவிகள்; ஆ.சு.ஐ. ஸ்கேன் வசதி ஆகியவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த 8,767 கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 10,146 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஏழு நகர்ப்புற சுகாதார மையங்களில், மூன்று மையங்களுக்கு 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டவும்; 21 லட்சம் ரூபாய் செலவில் புதிய மருத்துவக் கருவிகள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 84 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் செய்து தந்துள்ளோம். உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசின் நலத்திட்ட உதவிகளான, விலையில்லா மடிக்கணினி; நான்கு இணை சீருடைகள்; புத்தகப் பை; பாடப் புத்தகங்கள்; நோட்டுப் புத்தகங்கள்; கணித உபகரணப் பெட்டி; வண்ணப் பென்சில்கள்; காலணி; மிதிவண்டி மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை ஆகியவற்றை இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 88,000 மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர்.
உயர் கல்வியைப் பொறுத்த வரையில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள் 11 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்வெட்டு முற்றிலும், கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் நீக்கப்பட்டுவிட்டது. வாக்காளப் பெருமக்களே, இந்த 105 நாட்களில் 96 நாட்கள் மின் தடை ஏதுமின்றி தமிழகம் எங்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நகராட்சித் துறையால் 413 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகளான, குடிநீர்த் திட்டப் பணிகள்; சாலைகள்; மழைநீர் வடிகால்கள்; திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் உள்ளிட்ட 445 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு; அவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 282 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர்.
நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடி மாநகராட்சியுடன் ஐந்து ஊராட்சிகளை இணைத்துள்ளேன். இந்தப் பகுதிகளிலும் மாநகராட்சிக்கு இணையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில்
20 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நான் ஆணையிட்டுள்ளேன். 300 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்தை மேற்கொள்ள ஆணையிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 அம்மா உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 11 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் 14 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடி நகரத்திற்கு முதற்கட்டமாக வட்ட மற்றும் ஆரச் சாலைகள் அமைக்க விரிவான திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி - கொல்லம் சாலை மற்றும் மதுரை-தூத்துக்குடி சாலை ஆகியவை அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சிப் பகுதியில் பண்ணை பசுமை நுகர்வோர்க் கடை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநகராட்சிப் பகுதியில் 1,932 நபர்களுக்கு பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 8,125 மீனவக் குடும்பங்களுக்கு 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திரேஸ்புரத்தில் 16 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் 12 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயம் ஆக்கப்பட்டு வருகிறது. இப்படி உங்கள் நலனே எனது நலன் என செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அரசு எனது தலைமையிலான அரசு. தன்னலமற்ற முறையில் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு நான் செயல்பட்டு வருகிறேன்.
உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகளை எடை போட்டு; உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த இடைத் தேர்தலில் எங்களை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து உங்கள் அன்புச் சகோதரியின் அரசாட்சி என்பதை நீங்கள் நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில், கழகப் பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளருமான அன்புச் சகோதரி திருமதி ஹ.ஞ.சு. அந்தோணி கிரேஸி அவர்கள் போட்டியிடுகிறார். 1972 முதல் தொடர்ந்து மக்களுக்கு தொண்டாற்றி வரும் இவர், உங்கள் நலனுக்காக பாடுபடுவார்; உங்களையே சுற்றிச் சுற்றி வந்து உங்கள் குறைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப செயல்படுவார் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
உங்கள் பொன்னான வாக்குகளை இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் செலுத்தி, அன்புச் சகோதரி ஹ.ஞ.சு. அந்தோணி கிரேஸி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று கூறி
விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.''
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.