முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரியில் ரூ. 22 கோடி செலவில் திருப்பதி கோவில்

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

குமரி - கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ. 22.50 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டுமான பணி நேற்று தொடங்கியது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் 2010ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஸ்ரீநிவாச கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.
இதை தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்ற பகுதியில் திருப்பதியில் இருப்பதை போன்று கோயில் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. கோவில் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை விவேகானந்தா கேந்திரம் தானமாக வழங்கியதை தொடர்ந்து 2013ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பூமிபூஜை நடத்தப்பட்டது. கோயில் கட்டுவதற்கான அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கோயில் கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின. வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பத்மாவதி தாயார், கருட பகவான் சன்னதிகள், தங்க கொடிமரம், தங்க கோபுரம், தெப்பக்குளம், கல்யாணமண்டபம், முடி காணிக்கை செலுத்துமிடம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்தும் இங்கு இடம் பெறும். ஒரு வருடத்தில் முடியும். திருப்பதியில் நடப்பதை போன்று நாள்தோறும் பூஜைகள், வழிபாடுகள், திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளதால் கன்னியாகுமரிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என பக்தர்கள் தெரிவித்தனர். முழு கட்டுமான பணிகளும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவடைந்து விடும் என்று சென்னையில் உள்ள உள்ளூர் திருப்பதி தேவஸ்தான கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து