எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் - மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் தோற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது. அந்த அணி அபாரமான பின்ச் சதம் மற்றும் மேக்ஸ்வெல், பெய்லி, அரைசதங்களுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
ஏரோன் பின்ச்சிற்கு முதல் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் மிஸ் ஆனது. விளைவு ஏரோன் ஃபின்ச் 128 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 135 ரன்கள் விளாசினார். பின்ச் கேட்சை விட்ட பிறகு சிறப்பாக ஆடியது போல் கடைசியில் 66 ரன்கள் எடுத்த கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் கேட்ச் கோட்டைவிடப்பட்டது. அவர் 40 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.
பின்ச் எடுத்த 135 ரன்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் 5-வது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். வார்னருடன் 57 ரன்கள் தொடக்கம் கண்ட பின்ச் பிறகு பெய்லியும் இவரும் இணைந்து 146 ரன்களைச் சேர்த்து 3 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஆட்டத்தை கொண்டு சென்றனர். ஆஸ்திரேலியா கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை எடுத்தது.
அதன் பிறகு மேக்ஸ்வெல் வழக்கமான பாணியில் நகர்ந்து கொண்டு ஆடுவது, மேலேறி வந்து ஆடுவது என்று அடிக்கத் தொடங்கினார். 42-இல் இவருக்கும் ஒரு வாழ்வு வழங்கியது இங்கிலாந்து ஆனால் அந்த ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசப்பட்டது. கடைசியில் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 66 ரன்களை 11 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்து ஸ்டீவ் ஃபின்னின் ஹாட்ரிக் விக்கெட்டுகளில் ஒன்றானார். மிட்ச்ல் மார்ஷ் விரைவு 23 ரன்களையும் பிராட் ஹேடின் 14 பந்துகளில் 31 ரன்களையும் விளாசியதில் கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை ஆஸி.விளாச ஸ்கோர் 342 ரன்களை எட்டியது.
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து ஆட்டம் முழுதும் தடுமாறி கடைசியில் 41.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் சற்றும் எதிர்பாராத விதமாக இங்கிலாந்தை திணறச் செய்து 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
மொயீன் அலி 5-வது ஓவரில் ஸ்டார்க் வீசிய ஷாட் பந்தில் புல் ஆட முயன்று 10 ரன்களில் மிட் ஆனில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து 10 ரன்களில் கேரி பாலன்ஸ் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை பிளிக் செய்தார். ஆனால் தரையில் ஆடாமல் காற்றில் ஆட ஷாட் மிட்விக்கெட்டில் ஃபின்ச்சிடம் கேட்ச் ஆனார்.
36 ரன்களுடன் ஆடி வந்த இயன் பெல், மிட்செல் மார்ஷ் பந்தை ஒரு சுழற்று சுழற்ற மிட்விக்கெட்டில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார். அதற்கு அடுத்த பந்தே ஜோ ரூட் அவுட் ஆனார். மீண்டும் ஷாட் பந்து, ஜோ ரூட் ஷாட்டிற்குச் சென்று டாப் எட்ஜ் செய்ய ஹேடின் கேட்ச் பிடித்தார். கேப்டன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர அவர் 6 பந்துகள் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல், மிட்செல் மார்ஷ் வீசிய பந்துக்கு ஹேடினின் அற்புதமான தாழ்வான கேட்சால் அவுட் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
08 May 2024 -
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
08 May 2024வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
போலீசார் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை: தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?'' என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கே
-
மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 இ.வி.எம். எரிந்து முற்றிலும் நாசம்
08 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
தஙகம் விலை சற்று குறைந்தது
08 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனையானது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
விசா கொள்கையில் திடீர் மாற்றம்: ஆஸி., நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
08 May 2024மெல்போர்ன், மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.