எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் - உலக கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிராக காலிறுதி போட்டியில், இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம், நடப்பு உலக கோப்பையில் தொடர்ந்து 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ஆறாவது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியா-வங்கதேசம் நேற்று மெல்போர்ன் மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா ரோகித் ஷர்மா சதம் உதவியுடன் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய வங்கதேசம் 45 ஓவர்களிலேயே அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.
முன்னதாக, டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்தியாவுக்கு ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்திருந்தபோது, தவான் ஸ்டம்பிங்காகி அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லி வெறும் 3 ரன்களில் நடையை கட்டினார். சற்று நம்பிக்கையளித்த ரஹானேவும் மோசமான ஒரு ஷாட் மூலம் 19 ரன்களில் அவுட் ஆனார்.
28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்திருந்தது. எனவே மேற்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் ரெய்னா இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், ஓவர்கள் முடிவடைய இருந்த நிலையில், ரோகித் ஷர்மா மற்றும், ரெய்னா அதிரடியை ஆரம்பித்தனர்.
நன்கு ஆடிக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா 65 ரன்கள் எடுத்திருந்தபோது மோர்டசா பந்து வீச்சில் முஸ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.இதைத் தொடர்ந்து டோணி களமிறங்கினார். ஆனால் 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் டோணி தஸ்கின் அகமது பந்து வீச்சில் நாசிர் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக 126 பந்துகளில், 137 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மாவும், அதே பவுலரால் கிளீன் பௌல்ட் செய்யப்பட்டார்.
ஆனால் இறுதி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா காட்டிய அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. 50 ஓவர்கள் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. 10 பந்துகளில் 23 ரன்களுடன் ஜடேஜாவும், 3 ரன்களுடன் அஸ்வினும் களத்தில் நின்றனர். அந்த அணியின் தஸ்கின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட் செய்ய வந்த வங்கதேசம் பதற்றமின்றி சேஸிங்கை தொடங்கியது. வங்கதேசம் 6.3 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்து தமிம் இக்பால் 25 ரன்களில் வெளியேறினார். அந்த அதிர்ச்சியில் இருந்து வங்கதேசம் மீள்வதற்குள், அதற்கு அடுந்த பந்திலேயே, தேவையில்லாமல் ஓடி, ஜடேஜாவால் இம்ருல் கையேஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் 5 ரன்களுடன் நடையை கட்டினார்.
சவுமியா சர்க்கார் 29 ரன்களும், மஹ்மதுல்லா 21 ரன்களும் எடுத்த நிலையில், அடுத்தடுத்து முகமது ஷமி பந்து வீச்சில் வெளியேறினர். சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் போன்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்களும், முறையே 10 மற்றும் 27 ரன்களில் நடையை கட்டினர். அந்த அணியிலே அதிகபட்ச ரன் என்றால், அது நாசிர் ஹொசைன் எடுத்த 35 ரன்கள்தான். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் வங்கதேசம் திணறியது.
45வது ஓவரில் வங்கதேசம், 193 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் உமேஸ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டும், முகமது சமி, ரவிந்தர ஜடேஜா தலா 2விக்கெட்டும், மோகித் சர்மா 1, விக்கெட்டும் எடுத்தனர். இதனால், இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் விருது, ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.