எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.13 - மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்பட புதியதாக 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தயாநிதிமாறன் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான தயாநிதி மாறனும் ஏர்செல் நிறுவனம் விற்பனை விவாகரத்தில் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் 3 கேபினட் அமைச்சர்கள் பதவி காலியாக இருந்தது. அதனால் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மன்மோகன் சிங் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்வதையும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று மத்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்தார்.
4 பேருக்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கிஷோர் சந்திர தியோ மலைவாழ் மக்கள் நலம் மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பெனி பிரசாத் வர்மா, எஃகு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் திவேரி ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்தி இலாகாவை மம்தா பானர்ஜி வைத்திருந்தார். அவரது கட்சிக்காரருக்கே இந்த இலாகா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷ் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்த 4 கேபினட் அமைச்சர்களை தவிர மேலும் 4 இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் முதலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தவர். ஸ்ரீகாந்த் ஜெனா,புள்ளி இயல் திட்ட அமுலாக்க, இரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவன் சிங் கெடோவர், வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைச்சர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதீப் பந்தோப்த்யாயா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சரண்தாஸ் மகந்த், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிதேந்திர சிங்,உள்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மிலிந்த் தியோரா,தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள முரளி தியோராவின் மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் சுக்லா, பாராளுமன்ற விவகாரத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சில மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விலாஸ் ராவ் தேஷ்முக்( அறிவியல், தொழில் நுட்பம்) வீரப்பமொய்லி (கம்பெனி விவகாரம்) ஆனந்த் சர்மா (வணிகம்,தொழில், கூடுதல் பொறுப்பாக ஜவுளித்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது) பி.கே.பன்சால்(பாராளுமன்ற விவகாரம். இவர் நீர்வளத்துறையும் கூடுதலாக கவனிப்பார்) சல்மான் குர்ஷீத் (சட்டம், நீதி. இவர் சிறுபான்மையினர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார்) இ.அகமது வெளியுறவுத்துறை மற்றும் மனிதவளத்துறை மேம்பாடு) புதுவையை சேர்ந்த நாராயணசாமி ( தனிநபர் நலன், பென்சன்,மக்கள் குறை தீர்ப்பு பிரதமர் அலுவலகம்) ஹரீஸ் ரவுத் (விவசாயம்,உணவு பதப்படுத்தும் தொழில், பாராளுமன்ற விவகாரம்) முகுல்ராய் (கப்பல்துறை) அஸ்வினி குமார் (திட்டம், அறிவியல், தொழில்நுட்பம்)
இந்த நிலையில் ராஜினாமா செய்த தயாநிதிமாறன், முரளி தியோரா,ஹண்டிக், காந்திலால் புரியா ஆகியோர்களின் அமைச்சர் பதவி ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மேலும் மத்திய அமைச்சர்கள் எம்.எஸ்.கில், சாய் பிரதாப், அருண் எஸ்.யாதவ் ஆகியோர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்கிவிட்டார்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை சரியாக 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், கபில் சிபல் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.